பெஷாவர் பள்ளி தாக்குதலுக்கு திட்டம்போட்டு கொடுத்த தீவிரவாதி சுட்டுக்கொலை!
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பெஷாவரில் பள்ளி குழந்தைகளை சுட்டுக்கொலை செய்த சதிக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய தீவிரவாதி உட்பட 7 பேரை கொன்றுள்ளது பாகிஸ்தான் ராணுவம்.
பெஷாவரில் ராணுவ பள்ளி குழந்தைகள் மீது தாக்குதல் நடத்திய தலிபான் தீவிரவாதிகளை சுட்டுக்கொல்ல பாகிஸ்தான் ராணுவம் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக, கைபர் கணவாய் அருகேயுள்ள, கன்டி என்ற இடத்தில் நடத்திய தாக்குதலில், 7 பேர் கொல்லப்பட்டனர். அதில் சதாம் என்ற தீவிரவாதியும் ஒருவராகும். பள்ளி குழந்தைகளை கொலை செய்யும் திட்டத்திற்கு மூளையாக இருந்து திட்டத்தை போட்டுக்கொடுத்தது இந்த சதாம்தான் என்று தெரியவந்துள்ளது.
பெஷாவரில் சமீபத்தில் நடந்த தாக்குதலில் பெரும்பான்மையான குழந்தைகள் உட்பட 150 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications