தாராளமாக வந்து பாருங்க.. இந்தியா எந்த ஒரு தீவிரவாத முகாம்களையும் அழிக்கவில்லை.. பாகிஸ்தான் சவால்
Recommended Video
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்தியா எந்த ஒரு தீவிரவாத முகாம்களையும் அழிக்கவில்லை என பாகிஸ்தான் ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா இந்த விஷயத்தில் கூறுவது முற்றிலும் பொய் என்றும் விளக்கம் அளித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் உள்பட 3பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தியது.

ராணுவ தளபதி பிபின் ராவத்
இந்த தாக்குதலில் 6 முதல் 10 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வந்த மூன்று தீவிரவாத முகாம்களும் அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் நேற்று தெரிவித்தார்.

முற்றிலும் பொய்
இதற்கு பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் நள்ளிரவில் வெளியிட்டுள்ள டுவிட் பதிவு மூலம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்தியா எந்த ஒரு தீவிரவாத முகாம்களையும் அழிக்கவில்லை. இந்தியா சொல்வது முற்றிலும் பொய்.

பாகிஸ்தான்
வேண்டுமானால் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரி எந்த ஒரு வெளிநாட்டு தூதரையோ அல்லது மீடியாவையோ அழைத்து வரலாம். அவர்களிடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் இல்லை என்பதை நிரூபிக்கிறோம்.

புல்வமா தாக்குதல்
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்திய ராணுவத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் பொய்களை கூறி இருநாட்டுக்கும் இடையிலான அமைதியை சீர்குலைத்து வருகிறார்கள்.

அரசியலுக்காக
சில உள்நாட்டு நலன்களுக்கு நலன்களுக்காகவும், அரசியலுக்காவும் இந்திய இராணுவத்திடம் இருந்து இத்தகைய தவறான கூற்றுக்கள் செய்யப்டுகின்றன. ஆனால் ராணுவ நெறிமுறைகளுக்கு எதிரானது" என்று கூறியுள்ளார்.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications