பாகிஸ்தானை ஒழுங்கா இருக்க சொல்லுங்க.. இல்லைனா பேச மாட்டோம்.. சீன அதிபரிடம் நேரில் சொன்ன மோடி
Recommended Video
பிஷ்கேக்: தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் கைவிட்டால்தான், அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு, அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, அந்த நாட்டு தலைநகர், பிஷ்கேக் சென்றுள்ளார். அங்கு என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்-கை சந்தித்து பேசினார் மோடி. சுமார் 20 நிமிடங்கள் இந்த உரையாடல் நீடித்தது.

இப்போதுள்ள, தீவிரவாத சூழ்நிலையில் இருந்து பாகிஸ்தான் வெளியே வரவேண்டும். ஆனால் இப்போதைய நிலையில், அப்படி எந்த ஒரு முன்னேற்றத்தையும் நாங்கள் பார்க்கவில்லை. பாகிஸ்தான் இந்த விஷயத்தில் உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் அந்த நாட்டுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும் என்று மோடி அப்போது சீன அதிபரிடம் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே இந்த தகவலை கூறினார்.
சீனாவைப் பொறுத்தளவில் பாகிஸ்தானின் மிக நெருங்கிய நட்பு நாடாக உள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு அடிப்படை கட்டமைப்புகளில், சீனா பெரும் முதலீடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில் இதே உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் பங்கேற்ற போதிலும், மோடி அவருடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே இந்திய நிலைப்பாட்டை, சீன அதிபர் வாயிலாக பாகிஸ்தானுக்கு கடத்தியுள்ளார் மோடி.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்திய பிரதமர் மோடிக்கும், அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி, இந்திய வெளியுறவு துறை அமைச்சருக்கும் தனித்தனியாக கடிதம் எழுதி, காஷ்மீர் விவகாரம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி, சீன அதிபரிடம் தெரிவித்துள்ள தீவிரவாதம் தொடர்பான இந்த கருத்து மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 40 துணை ராணுவப் படையினர் கொல்லப்பட்டனர். இதன் பிறகு தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தரப்பு தீவிர அழுத்தம் கொடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார், சர்வதேச பயங்கரவாதியாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட வேண்டும் என்று இந்திய தரப்பில் முன்வைத்த கோரிக்கைக்கு சீனாவும் ஆதரவு அளித்து திருப்பத்தை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications