அப்படி வாங்க வழிக்கு.. பல கோடி நஷ்டம்.. அனைத்து விமானங்களுக்கும் வான்வழியை திறந்துவிட்ட பாகிஸ்தான்
லாகூர்: இந்தியா பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது.
இது பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.இந்த நிலையில், இருநாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம் நிலவியதால், இந்திய விமானங்கள் தங்கள் நாட்டு வழியாக செல்ல பாகிஸ்தான் அனுமதி அளிக்கவில்லை.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்தியாவும் தங்களது வான் வழியை மூடியது. பாகிஸ்தான் தங்களது வான்வழி எல்லையை மூடியதால் பல்வேறு நாடுகளும் பாதிப்புக்கு உள்ளாகின. குறிப்பாக ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து செல்லும் விமானங்கள் பாகிஸ்தான் வழி வராமல் சுற்றிக்கொண்டு சென்றது.
இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதேபோன்று பாகிஸ்தான விமானங்கள், மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு செல்ல இந்திய வான் வழியை பயன்படுத்தாமல் சுற்றிக்கொண்டு சென்றது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் பதற்றம் முடிவுக்கு வந்ததை அடுத்து பாகிஸ்தான் தங்களது நாட்டில் வான்வழி போக்குவரத்திற்கு அனுமதி அளித்திருக்கிறது.
போர் நிறுத்தம் அறிவிப்பு வெளியான உடனே பாகிஸ்தான் தங்களது வான்வழி எல்லையை திறந்து இருக்கிறது. அனைத்து விதமான வான் போக்குவரத்தும் திறக்கப்பட்டு இருப்பதாக பாகிஸ்தான் கூறி இருக்கிறது. இதன் மூலம் பெரும் அளவில் பயணம் நேரம், எரிபொருள் செலவு மிச்சமாகும் என தெரிகிறது. எனினும் இந்தியா தங்களது வான்வழியை பாகிஸ்தானுக்கு இன்னும் திறப்ப்ம்து குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications