தீவிரவாதிகளை நாளையே பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும்: அரசுக்கு பாக். மக்கள் கெடு
பெஷாவர்: பாகிஸ்தானில் பள்ளிக்குள் புகுந்து குழந்தைகளை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகளை நாளையே பொது இடத்தில் மக்கள் கண் முன்பாக தூக்கிலிட வேண்டும் என்று அந்த நாட்டு மக்கள் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளனர்.
தீவிரவாதிகளை ஒடுக்க அரசுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் பாகிஸ்தான் மக்கள் ஒன்று திரண்டுள்ளனர். #WeWantPublicExecutionTomorrow என்ற ஹேஷ்டேக்கை டிவிட்டரில் உருவாக்கி அதன் மூலம் சமூக வலைத்தளங்களில் இக்கோரிக்கையை வலுப்படுத்தி வருகின்றனர் பாகிஸ்தான் மக்கள். அதுமட்டுமின்றி ஆன்லைனில் கையெழுத்து இயக்கங்களும் நடத்தப்பட்டு வருகிறது.

இவர்கள் அனைவரின் கோரிக்கையும் ஒன்றுதான். குழந்தைகள் என்றும் பாராமல் கொலை செய்த தீவிரவாதிகளை பிடித்து வந்து மக்கள் கண் எதிரிலேயே தூக்கிலிட வேண்டும் என்பதுதான் அவர்களின் ஒற்றை கோரிக்கை. அதுவும் நாளைக்கே அதை செய்ய வேண்டும் என்று அரசுக்கு மக்கள் கெடு கொடுக்கும் விதமாக இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், அனைத்து கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த குழு இன்னும் ஏழு நாட்களுக்குள் தீவிரவாதிகளை அழிக்க செயல் திட்டம் வகுக்கும் என்றும் கூறியிருந்தார். தூக்கு தண்டனைக்கு விதித்த தடையையும் பாகிஸ்தான் தளர்த்தியுள்ளது.
ஆனால் மக்கள் கெடு விதிப்பதை பார்த்தால் அவர்கள் இதற்கு மேலும் பொறுத்துக்கொள்ள போவதில்லை என்பது தெரிகிறது. நாளைக்குள் அரசு சில தீவிரவாதிகளையாவது பலி கொடுக்காவிட்டால், பாகிஸ்தானில் மக்கள் புரட்சி வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications