மோசமடையும் காஷ்மீர் பிரச்சனை.. அமெரிக்காவின் உதவியை நாட பாகிஸ்தான் யோசனை.. இம்ரான் கான் பிளான்?
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் பெரும்பாலும் அமெரிக்காவின் உதவியை நாடுவதற்கு வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
Recommended Video
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் பெரும்பாலும் அமெரிக்காவின் உதவியை நாடுவதற்கு வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்தியா அதிரடி நடவடிக்கை ஏதாவது எடுத்தால் கண்டிப்பாக பாகிஸ்தான் அமெரிக்காவின் உதவியை நாட வாய்ப்புள்ளது.
காஷ்மீரில் தொடர்ந்து நிலைமை மோசம் அடைந்து வருகிறது. மொத்த மாநிலத்தையும் இந்திய ராணுவம் அப்படியே தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.
காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக இன்று முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் காஷ்மீர் பிரச்சனையில் தற்போது பாகிஸ்தானும் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.

அமெரிக்கா
ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் ஏற்கனவே, தேவையான உதவிகளை செய்ய தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார். மோடி கூட என்னிடம் காஷ்மீர் பிரச்சனையில் உதவும்படி கேட்டார் என்று டிரம்ப் குறிப்பிட்டார். ஆனால் இதை இந்திய தரப்பு கடுமையாக மறுத்து வந்தது. மோடி டிரம்பிடம் உதவி கேட்கவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆனால் என்ன
ஆனால் அப்போதே அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த யோசனைக்கு ஆதரவு தெரிவித்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். அமெரிக்கா காஷ்மீர் பிரச்சனையில் பேச்சுவார்த்தை செய்தால் பிரச்சனை விரைவாக தீர வாய்ப்புள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையில் அது சுமூக தீர்வை கொண்டு வர வாய்ப்புள்ளது, என்று அவர் குறிப்பிட்டார்.

என்ன உதவி
இந்த நிலையில் தற்போது காஷ்மீரில் ராணுவம் குவிக்கப்பட்டு வருவதை அடுத்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவின் உதவியை நாடுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. பாகிஸ்தான் இந்த விஷயத்தில் தனியாக எதுவும் செய்ய முடியாது. அதனால் அமெரிக்காவின் உதவியை நாட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கருத்து தெரிவித்தார்
ஏற்கனவே இது தொடர்பாக இம்ரான் கான் கருத்து தெரிவித்துள்ளார். அதில், காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க உதவுவதாக அதிபர் டிரம்ப் குறிப்பிட்டு இருந்தார் . இதுதான் அதற்கு சரியான நேரம். காஷ்மீரில் நிலைமை மோசமாகி வருகிறது. அங்கு இந்திய ராணுவம் அத்து மீறி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications