Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கைல காசு இல்லை.. பணப்பிரச்சனையால் உகாண்டாவில் மாட்டிக்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்

உகாண்டாவிற்கு கிரிக்கெட் விளையாட சென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பணப்பிரச்சனை காரணமாக அங்கு மாட்டிக் கொண்டு உள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கையில் பணம் இல்லாமல் உகாண்டாவில் மாட்டிக்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்- வீடியோ

    கம்பலா: உகாண்டாவிற்கு கிரிக்கெட் விளையாட சென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பணப்பிரச்சனை காரணமாக அங்கு மாட்டிக் கொண்டு உள்ளனர். மேலும் அங்கு நடக்க இருந்த டி-20 கிரிக்கெட் தொடரும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

    உகாண்டாவில் இருந்து திரும்பி வர அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பணம் கொடுக்கவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் புகார் அளித்து இருக்கின்றனர். மேலும் அங்கு தங்களது பணம் தான் அதிகம் செலவு ஆவதாக தெரிவித்து உள்ளனர்.

    இந்த சம்பவம் தற்போது ஐசிசி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இரண்டிற்கும் இடையில் பிரச்சனையை உருவாக்கி இருக்கிறது. இன்னும் பாகிஸ்தான் வீரர்கள் அங்கு தான் சிக்கி தவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    உகாண்டாவில் பாகிஸ்தான் வீரர்கள்

    உகாண்டாவில் பாகிஸ்தான் வீரர்கள்

    பாஸ்கிதானை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் சிலர் உகாண்டா நாட்டிற்கு கிரிக்கெட் விளையாட சென்றுள்ளனர். அங்கு நடக்கும் 'அஃப்ரோ டி-20 லீக்' போட்டியில் கலந்து கொள்வதற்காக இவர்கள் அங்கு சென்றனர். பாகிஸ்தானை சேர்ந்த முக்கிய வீரர்களான சயீத் அஜ்மல், யாசிர் ஹமித், இம்ரான் பர்ஹாத் ஆகியோரும் இந்த அணியில் இருந்தார்கள்.

    போட்டி ரத்து செய்யப்பட்டது

    போட்டி ரத்து செய்யப்பட்டது

    இவர்கள் சரியாக உகாண்டா செல்லும் சமயத்தில் அங்கு நடக்க இருந்த கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. முதல் இரண்டு போட்டிகள் மட்டும் வெவ்வேறு அணிகளுக்கு இடையில் நடந்து இருக்கிறது. இதையடுத்து பாகிஸ்தான் வீரர்களை மீண்டும் நாட்டுக்கு திரும்பி செல்ல உகாண்டா கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கேட்ட ஒப்பந்த பணத்தை உகாண்டா கொடுக்க மறுத்து இறுகின்றனர்.

    டிக்கெட் ரத்து

    டிக்கெட் ரத்து

    முதலில் பாகிஸ்தான் வீரர்கள் இது குறித்து விவாதம் செய்து இருக்கிறார்கள். ஆனால் உகாண்டா கிரிக்கெட் வாரியம் அவர்கள் கோரிக்கையை கேட்காததால் அவர்கள் மீண்டும் பாகிஸ்தான் திரும்ப முடிவு செய்து உள்ளனர். ஆனால் போட்டி ரத்தானதால் அவர்களின் விமான டிக்கெட்டும் பிளாக் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் அவர்கள் மீண்டும் சொந்த காசில் ஹோட்டல் எடுத்து அங்கு தங்கி இருக்கின்றனர்.

    போதிய பணம் இல்லை

    போதிய பணம் இல்லை

    எல்லா வீரர்களிடமும் அங்கிருந்து திரும்பி வரும் அளவிற்கு கையில் தற்சமயம் பணம் இல்லை என்று கூறியுள்ளனர். மேலும் அவர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். ஐசிசி அமைப்பு சொன்ன காரணத்தினாலேயே இப்படி பாகிஸ்தான் வீரர்களை அனுப்பியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. தற்போது இதனால் ஐசிசி அமைப்புக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இடையில் பிரச்சனை உருவாகி இருக்கிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+