கைல காசு இல்லை.. பணப்பிரச்சனையால் உகாண்டாவில் மாட்டிக்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்
உகாண்டாவிற்கு கிரிக்கெட் விளையாட சென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பணப்பிரச்சனை காரணமாக அங்கு மாட்டிக் கொண்டு உள்ளனர்.
Recommended Video

கம்பலா: உகாண்டாவிற்கு கிரிக்கெட் விளையாட சென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பணப்பிரச்சனை காரணமாக அங்கு மாட்டிக் கொண்டு உள்ளனர். மேலும் அங்கு நடக்க இருந்த டி-20 கிரிக்கெட் தொடரும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
உகாண்டாவில் இருந்து திரும்பி வர அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பணம் கொடுக்கவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் புகார் அளித்து இருக்கின்றனர். மேலும் அங்கு தங்களது பணம் தான் அதிகம் செலவு ஆவதாக தெரிவித்து உள்ளனர்.
இந்த சம்பவம் தற்போது ஐசிசி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இரண்டிற்கும் இடையில் பிரச்சனையை உருவாக்கி இருக்கிறது. இன்னும் பாகிஸ்தான் வீரர்கள் அங்கு தான் சிக்கி தவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உகாண்டாவில் பாகிஸ்தான் வீரர்கள்
பாஸ்கிதானை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் சிலர் உகாண்டா நாட்டிற்கு கிரிக்கெட் விளையாட சென்றுள்ளனர். அங்கு நடக்கும் 'அஃப்ரோ டி-20 லீக்' போட்டியில் கலந்து கொள்வதற்காக இவர்கள் அங்கு சென்றனர். பாகிஸ்தானை சேர்ந்த முக்கிய வீரர்களான சயீத் அஜ்மல், யாசிர் ஹமித், இம்ரான் பர்ஹாத் ஆகியோரும் இந்த அணியில் இருந்தார்கள்.

போட்டி ரத்து செய்யப்பட்டது
இவர்கள் சரியாக உகாண்டா செல்லும் சமயத்தில் அங்கு நடக்க இருந்த கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. முதல் இரண்டு போட்டிகள் மட்டும் வெவ்வேறு அணிகளுக்கு இடையில் நடந்து இருக்கிறது. இதையடுத்து பாகிஸ்தான் வீரர்களை மீண்டும் நாட்டுக்கு திரும்பி செல்ல உகாண்டா கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கேட்ட ஒப்பந்த பணத்தை உகாண்டா கொடுக்க மறுத்து இறுகின்றனர்.

டிக்கெட் ரத்து
முதலில் பாகிஸ்தான் வீரர்கள் இது குறித்து விவாதம் செய்து இருக்கிறார்கள். ஆனால் உகாண்டா கிரிக்கெட் வாரியம் அவர்கள் கோரிக்கையை கேட்காததால் அவர்கள் மீண்டும் பாகிஸ்தான் திரும்ப முடிவு செய்து உள்ளனர். ஆனால் போட்டி ரத்தானதால் அவர்களின் விமான டிக்கெட்டும் பிளாக் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் அவர்கள் மீண்டும் சொந்த காசில் ஹோட்டல் எடுத்து அங்கு தங்கி இருக்கின்றனர்.

போதிய பணம் இல்லை
எல்லா வீரர்களிடமும் அங்கிருந்து திரும்பி வரும் அளவிற்கு கையில் தற்சமயம் பணம் இல்லை என்று கூறியுள்ளனர். மேலும் அவர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். ஐசிசி அமைப்பு சொன்ன காரணத்தினாலேயே இப்படி பாகிஸ்தான் வீரர்களை அனுப்பியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. தற்போது இதனால் ஐசிசி அமைப்புக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இடையில் பிரச்சனை உருவாகி இருக்கிறது.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப்












Click it and Unblock the Notifications