காஷ்மீருக்காக இந்தியாவுடன் போர் புரியவும் பாகிஸ்தான் தயாராக உள்ளது: முஷாரப் கொக்கரிப்பு
இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கு எதிரான போருக்கு பாகிஸ்தான் ராணுவம் தயாராகவே உள்ளதாக அந்த நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல்களுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இந்திய தாக்குதல் உக்கிரமானதும் ஐநாவிடம் தஞ்சமடைந்தது பாகிஸ்தான். ஆனால் ஐநா இந்த விவகாரத்தில் தலையிடப்போவதில்லை என்று கூறிவிட்டது.இந்நிலையில், பாக். முன்னாள் அதிபர் முஷாரப் இன்று அளித்த பேட்டியில், "காஷ்மீர் மக்கள் ஆர்வமுடன் உள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிராக போர்தொடுக்க பாகிஸ்தான் ராணுவம் தயாராகவே உள்ளது.

காஷ்மீருக்காக போர் தொடுக்க வேண்டும் என்று லட்சக்கணக்கான பாகிஸ்தானியர்கள் எதிர்பார்க்கிறார்கள். காஷ்மீரும் எதிர்பார்க்கிறது. அதை செய்யும் திறமை பாகிஸ்தானுக்கு உள்ளது.
இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் குண்டுகளை வீசும்போது அவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதாவது, காஷ்மீரிலுள்ள மக்களுக்கு எந்த பிரச்சினையும் வந்துவிடக்கூடாது என்று பாகிஸ்தான் ராணுவம் யோசித்து தாக்குதலை நடத்துகிறது. ஆனால் இந்திய ராணுவத்துக்கு அதுபோன்ற எந்த கட்டுப்பாடும் கிடையாது என்பதால் பாகிஸ்தான் அதிகம் பாதிக்கப்படுகிறது.
இந்திய பிரதமர் மோடி முஸ்லிம்களுக்கு எதிரானவர். பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள அரசியல்வாதி. அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் கூட , மற்ற நடவடிக்கைகளும் பாகிஸ்தான் தயாராகவே இருக்க வேண்டும்.
பிரிட்டீஷ் அரசின் போது வளைந்து கொண்டு பின்னால் சென்றதைப்போல, இப்போது மோடியின் பின்னால் போவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொண்டு, நமது நாட்டு கவுரவத்தை காப்பாற்ற வேண்டும். காஷ்மீர் பாகிஸ்தானின் தேசிய பிரச்சினை. அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். இவ்வாறு முஷாரப் தெரிவித்துள்ளார்.
முஷாரப் அதிபராக இருந்தபோதுதான், இந்தியா-பாகிஸ்தான் நடுவே கார்கிலில் போர் மூண்டதும், போரின் இறுதியில் பாகிஸ்தான் தோற்று மண்ணை கவ்வியதும் நினைவிருக்கலாம்.
-
ஈரானும் ஊரானும் வாழட்டும்! நீங்க எந்த கட்சி அமெரிக்காவா? ஈரானா? தனது ஸ்டைலில் கமல் சொன்ன வார்த்தை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications