ரொட்டிய கூட சுட முடியாது..படுத்தே விட்ட பாக்! கொக்கரித்த ஷெபாஸ் ஷெரிஃப்..இப்போ பம்மி பேசும் அமைச்சர்
இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை குறி வைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதில் அளித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப், இந்தியா கோழைத்தனமான தாக்குதல் நடத்தி உள்ளதாகவும், பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்கும் என கொக்கரித்து இருந்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் தரப்பில் பதட்டத்தை குறைக்க தயாராக இருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா அசிப் கூறியிருக்கிறார்.
காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் காரணமாக கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியது. இந்த நிலையில் தீவிரவாதிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய பாதுகாப்பு படைகள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது.
இந்தியாவின் ராணுவம், விமானப்படை, கப்பல் படை இணைந்து நடத்திய இந்த கூட்டு ஆபரேஷனில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பாபல்பூர், முஷாபர்பாத், கோட்லி, மூர்தி ஆகிய பகுதிகளில் லஸ்கர் இ தொய்ஃபா, ஜெய்ஸ் இ முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தீவிரவாத அமைப்புகளில் தலைமையகங்கள், ஆயுதக் கிடங்குகள் தாக்கி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் இந்த திட்டமிட்ட துல்லிய தாக்குதலில் 70 தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிஃப் இந்தியாவின் பதிலடி தாக்குதல் போர் நடவடிக்கை தான் எனக் கூறியிருந்தார். இது தொடர்பாக பேசிய அவர்," இந்தியாவின் போருக்கு வலுவான பதிலடி கொடுக்க எங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. எதிரியை எப்படி சமாளிப்பது என்பது பாகிஸ்தானுக்கும் அதன் படைகளுக்கும் நன்றாகவே தெரியும். எதிரி தீங்கிழைக்கும் நோக்கங்களில் வெற்றி பெற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" எனக் கூறியிருந்தார்.
மேலும், இந்தியாவின் பொறுப்பற்ற நடவடிக்கை அணு ஆயுதங்கள் கொண்ட இரண்டு நாடுகளையும் ஒரு பெரிய மோதலுக்கு தள்ளி இருக்கிறது. இந்தியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டதாக பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் படுதே விட்டானய்யா பாகிஸ்தான் என்பதை போல பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா அசிப், இந்தியா பதற்றத்தை குறைத்தால், பாகிஸ்தான் தரப்பிலும் பதற்றத்தை குறைக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்திய நிலையில், ப்ளூம்பெர்க் டிவியிடம் பேசிய கவாஜா அசிப், "பகைமை நடவடிக்கைகளை தொடங்குவது பாகிஸ்தானின் நோக்கம் அல்ல. ஆனால், எங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்குத் தக்க பதிலடி கொடுப்போம் கடந்த இரு வாரங்களாக, இந்தியாவை எங்களால் சுமுகமாக அணுக முடியும் என தொடர்ந்து தெரிவித்து வருகிறோம். இந்தியா பின்வாங்கினால், நாங்களும் பதற்றத்தை குறைக்கத் தயார் இரு நாடுகளுக்கும் இடையிலான சமரச பேச்சுவார்த்தைகள் எதுவும் இதுவரை திட்டமிடப்படவில்லை" என்றும் கவாஜா அசிப் கூறியுள்ளார்.
காலையில் பாகிஸ்தான் பிரதமர் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும் எனக் கூறியிருந்த நிலையில் சிறிது நேரத்திலேயே பாதுகாப்புத் துறை அமைச்சர் பதற்றத்தை குறைக்க தயார் என கூறியிருப்பது பாகிஸ்தான் பயந்து பின்வாங்கி விட்டதையே குறிப்பதாக சொல்கின்றனர் பாதுகாப்பு நிபுணர்கள். இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுத்தால் இந்திய ராணுவம் பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறது. மேலும் ஒரு வேலை பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்த துவங்கினால் அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் கை கோர்க்கும் என்பதால் ஒரு நாள் கூட தாக்குப் பிடிக்க முடியாது என்ற பயத்தின் காரணமாகவே பாகிஸ்தான் தற்போது பதற்றத்தை குறைக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
-
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
பாகிஸ்தான் இருக்க வேண்டிய இடம் இதுதான்.. முகத்தில் அறைந்த அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications