பாகிஸ்தானில் சீனா முதலீடு, பதிலுக்கு இயற்கை வளங்கள் ஏற்றுமதி: இருநாடுகளால் இந்தியாவுக்கு சவால்
முசாபராபாத்: பாகிஸ்தான் நாட்டின் இயற்கை வளங்களை சீனாவுக்கு அளித்துவருகிறது. அதற்கு பதிலாக, பாகிஸ்தானில் சீனா பல வளர்ச்சி திட்டங்களுக்கு முதலீடு செய்துவருகிறது. இதன் மூலம் இரு நாடுகளும் இந்தியாவுக்கு எதிராக இந்த பிராந்தியத்தின் கட்டுப்பாட்டை வைத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
பல பில்லியன் டாலர் மதிப்புள்ள சைனா-பாகிஸ்தான் ஒப்பந்தம், மூலமாக பொருளாதார காரிடார் திட்டத்தை பாகிஸ்தானில் சீனா செய்து வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தானின் கில்கிட்-பல்திஸ்டான் மண்டலத்தில் சீனா அதிக அளவுக்கு முதலீடுகளை செய்து வருகிறது. காஷ்மீரில் உள்ள சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் தாதுக்களை சீனாவுக்கு பாகிஸ்தான் அனுப்பி வருகிறது.
இருவருக்கும் வெற்றி என்ற அடிப்படையில் இரு நாடுகளும் செய்யும் இந்த செயல்கள் முழுபக்கவே இந்தியாவுக்கு எதிரான முன்னெடுப்புகள் என்று எச்சரிக்கின்றனர் பன்னாட்டு பார்வையாளர்கள்.