தீவிரவாதத்தில் டெக்னாலஜியை புகுத்தி அடுத்த லெவலுக்கு சென்ற பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள சர்வர் ஒன்றை 10 பேர் மட்டுமே பயன்படுத்தியதை தேசிய புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உத்தம்பூரில் தாக்குதல் நடத்தியது பற்றி தேசிய புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் பாகிஸ்தானில் உள்ள கம்ப்யூட்டர் சர்வர் ஒன்றை உத்தம்பூரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் உள்பட 10 பேர் மட்டும் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.

தீவிரவாதிகள் இது போன்ற புதிய முறையை பயன்படுத்துவதாக புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர். லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்பினர் ஏதாவது தாக்குதல் நடத்துவதற்கு முன்பு சர்வரை அமைத்து காரியம் முடிந்ததும் அதை பயன்படுத்துவதை நிறுத்திவிடுகிறார்கள். இதன் மூலம் அவர்களின் செயல்பாடுகளை கண்டுபிடிப்பது போலீசாருக்கு கடினமாகிவிடுகிறது.
உத்தம்பூர் தாக்குதலை 10 பேர் நடத்தியுள்ளனர். அதனால் அவர்கள் தான் அந்த சர்வரை பயன்படுத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது. தாக்குதல் நடத்துவதற்கு முன்பு இது போன்ற சர்வர்களை லஷ்கர் இ தொய்பா பயன்படுத்துவது முகமது நவீத் என்ற தீவிரவாதியிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
இது போன்ற சர்வர்கள் அமைக்கப்படுவதும், பயன்படுத்தாமல் விடுவதும் சகஜம். உத்தம்பூர் மற்றும் குர்தாஸ்பூர் தாக்குதல்களை நடத்த தீவிரவாதிகள் ஊடுருவியது தெரியாமல் போனதற்கு இந்த சர்வர் பயன்பாடும் காரணம்.
இந்த சர்வர்கள் பாகிஸ்தானில் இருப்பதால் விசாரணையில் ஒரு பயனும் இல்லை என்று புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications