இருக்கையின் கீழ் பதுங்கியபடி, தீவிரவாத தாக்குதலை பேஸ்புக்கில் லைவ் போஸ்ட் செய்த நபர்!
பாரீஸ்: பாரீசிலிலுள்ள இசை அரங்கத்தில் நடைபெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலை உள்ளே இருந்தபடி பேஸ்புக்கில் அப்லோடு செய்துள்ளார் தப்பி பிழைத்த ஒரு பார்வையாளர்.
பிரான்ஸ் தலைநகர், பாரீசிலுள்ள புகழ்பெற்ற இசை ஹால், படாக்ளான். 150 வருடம் பழமையானது. அங்கு, நேற்று இரவு, அமெரிக்க குழுவினரின் ஈகிள்ஸ் ஆப் டெத் மெடல்' என்ற இசை நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது.
1500 பேர் ஒரே நேரத்தில் நிகழ்ச்சியை கண்டுகளிக்கும் வகையிலான அந்த ஹாலில், இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்திருந்தது.
இசை நிகழ்ச்சி நடந்தபோதுதான், 4 பேர்கொண்ட தீவிரவாத கும்பல், ஏகே47 ரக துப்பாக்கிகளாலும், கிரேனைட் குண்டுகளாலும் தாக்குதல் நடத்தினர்.
அப்போது, உள்ளே சிக்கிய ரசிகர்களில் ஒருவர்தான், பெஞ்சமின் கேசனோவஸ். இவர் சம்பவம் நடந்தபோது, சீட்டுக்கு அடியில் பதுங்கியிருந்த இவர், அங்கிருந்தபடியே, தனது செல்போனில், பேஸ்புக் வழியாக நடந்த சம்பவத்தை லைவாக அப்டேட் செய்துள்ளார்.
Je suis encore au Bataclan. 1e étage. Blessée grave ! Qu ils donnent au plus vite l assaut. Il y a des survivants à l intérieur. Ils abattent tout le monde. Un par un. 1e étage vite !!!!
Posted by Benjamin Cazenoves on Friday, November 13, 2015
"நான் இன்னும் படாக்ளானில்தான் உள்ளேன். கடுமையாக காயமடைந்துள்ளேன். பலரும் காயங்களோடு போராடி வருகிறார்கள். முதல் ஃப்ளோரில். வேகமாக வாருங்கள்." "உயிரோடு இருக்கிறேன். எங்கு பார்த்தாலும், சடல குவியல்" என இரு அப்டேட்டுகளை செய்துள்ளார்.
இந்த போஸ்ட்டுகள், சுமார் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோரால் ஷேர் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications