செளதியுடன் 'தோளோடு தோள் நிற்போம்' ...ஆனா ஏமனில் நடுநிலை...: இது பாகிஸ்தான் நிலைப்ப்பாடு
இஸ்லாமாபாத்: ஏமனில் செளதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் யுத்தம் நடத்தி வரும் நிலையில் நடுநிலை வகிப்பது என பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏமனில் ஈரான் ஆதரவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கை ஓங்கி உள்ளது. இவர்களை ஒடுக்க செளதி அரேபியா தலைமையில் ஏராளமான நாடுகள் யுத்தத்தில் குதித்துள்ளன.

இந்த யுத்தத்தில் தம்மோடு இணைந்து கொள்ளுமாறு பாகிஸ்தானுக்கு செளதி அரேபியா அழைப்பு விடுத்தது. அதே நேரத்தில் அண்டை நாடான ஈரான் கோபித்துக் கொள்ளுமோ? செளதிக்கு ஆதரவாக செயல்பட்டால் உள்நாட்டில் ரத்த ஆறு ஓடுமோ என்று அஞ்சியது பாகிஸ்தான்.
அதன் பின்னர் இது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் இரு சபைகளின் கூட்டுக் கூட்டம் கூட்டப்பட்டது.
கடந்த 5 நாட்களாக ஏமன் விவகாரத்தில் என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் பின்னர் ஏமன் பிரச்சனையில் நடுநிலை வகிப்பது என்றும் அதே நேரத்தில் செளதி அரேபியாவுக்கு எப்போதும் போல தோளோடு தோள் நிற்பது எனவும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications