நேபாளம்: மாயமான விமானம் காத்மாண்டு அருகே எரிந்த நிலையில் கண்டுபிடிப்பு .. 23 பேரும் பலி
காத்மாண்டு: நேபாளத்தில் 23 பேருடன் மாயமான சிறிய ரக விமானம் காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போகோரா என்ற நகரில் இருந்து 23 பேருடன் தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று ஜோஸோமுக்கு கிளம்பியது.

போகோராவில் இருந்து ஜோஸோம் செல்ல 18 நிமிடம் ஆகும். இந்நிலையில் விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் மாயமானது. போகோரா மற்றும் ஜோஸோம் இடையே விமானம் தரையிறங்கும் வசதி இல்லை.
இந்நிலையில் மியாக்தி மாவட்டத்தில் உள்ள தானா கிராமம் அருகே இருக்கும் காட்டுப்பகுதியில் விமானம் எரிந்த நிலையில் கிடந்ததை மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். விமானத்தின் பாகங்கள் 200 மீட்டர் தொலைவில் சிதறிக் கிடந்தன.
விமானத்தில் இருந்த 20 பயணிகள் மற்றும் 3 சிப்பந்திகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்தவர்களில் 2 பேர் குழந்தைகள். பயணிகளில் ஒருவர் குவைத்தை சேர்ந்தவர், மற்றொருவர் சீனாவை சேர்ந்தவர்.












Click it and Unblock the Notifications