அல்-சபாப் இயக்கத் தலைவர் மீது அமெரிக்கா தாக்குதல் – இறந்திருக்க 80 சதவீதம் வாய்ப்பு!
மொகடிசு: சோமாலியாவின் அல்- சபாப் தீவிரவாத குழுத்தலைவரின் மீது அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகன் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
சோமாலியா நாட்டில் சோமாலிய இஸ்லாமிய தீவிரவாத குழுவான அல்-சபாப் செயல்பட்டு வருகிறது.
அக்குழுவின் தலைவரான அகமது அப்டி கொடானே வாகனத்தில் சென்று கொண்டிருப்பது குறித்து அமெரிக்க படைகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
வான் வழித்தாக்குதல்:
கடலோர நகரமான பராவேயை நோக்கி அவர் வாகனத்தில் சென்று கொண்டிருப்பதை அறிந்த அமெரிக்கா, குறிப்பிட்ட இரு வாகனங்கள் மீது வான் வழி தாக்குதல் நடத்தியது.
ஆறு தீவிரவாதிகள் இறப்பு:
இத்தாக்குதலில் ஆறு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அத்தீவிரவாத இயக்கத்தின் தளபதியான அபு முகமது தெரிவித்தார்.
கொடானா பலியா?:
அவர்களது தலைவரான கொடானேவும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டாரா என்பதை உறுதி செய்ய அவர் மறுத்துவிட்டார்.
நிலநடுக்கம் போல் பயங்கரம்:
அமெரிக்கா தான் இத்தாக்குதலை நடத்தியததாக பெண்டகன் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலை நேரில் கண்ட ஒருவர் கூறுகையில், "வான் வழி தாக்குதல் நடைபெற்ற போது நில நடுக்கம் ஏற்பட்டது போல் மிக அதிக அளவில் ஓசை கேட்டது" என்று கூறினார்.
சப்லாலே நகர் அருகே:
சப்லாலே நகர் அருகே இத்தாக்குதல் நடைபெற்றதாக அப்பகுதி கவர்னரான அப்டிகாதிர் முகமது நார் கூறியுள்ளார். எனினும் இத்தாக்குதலில் கொடானே இறந்திருக்க 80 சதவீதம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.