அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய குவாண்டனமோ சிறைச் சாலை மூடப்படுகிறது
Subscribe to Oneindia Tamil

2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட பின்னர் அல்குவைதா தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தீவிர நடவடிக்கையை மேற்கொண்டது. அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட அல்குவைதா தீவிரவாதிகள் அனைவரும் கியூபா அருகே உள்ள குவாண்டனமோ சிறையில் அடைக்கப்பட்டனர்.
குவாண்டனமோ சிறைச் சாலையில் தீவிரவாதிகள் கொடூர சித்திரவதைகளுக்குள்ளான செய்திகள் வெளியாகி உலகை உலுக்கியது. இந்த நிலையில் தற்போது அந்த சிறைச்சாலையை மூடிவிட்டு அங்குள்ள கைதிகளை வேறு நாடுகளுக்கு மாற்ற அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இதற்காக வழக்கறிஞர் பால் லூயிஸ் என்பவை சிறப்புத் தூதராக நியமித்துள்ளது. அவர் வரும் நவம்பர் மாதம் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு குவாண்டனமோ சிறைச் சாலையை மூடுவதற்கான நடவடிக்கைகளை படிப்படியாக மேற்கொள்வார்.












Click it and Unblock the Notifications