வறுமையால் தந்தை தற்கொலை... மக்களுக்காக பிணைக் கைதி... எஸ்.ஆர். நாதனின் அறியப்படாத பக்கங்கள்
Subscribe to Oneindia Tamil
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முன்னாள் அதிபரும் அந்த தேசத்தின் 2-வது தந்தை எனவும் போற்றப்படும் மறைந்த தமிழர் வம்சாவளியைச் சேர்ந்த எஸ்.ஆர். நாதன் இளமையில் வறுமையாலும் பின்னாளில் அரசுப் பொறுப்பில் இருந்த காலத்தில் மக்களுக்காக தீவிரவாதிகளிடம் பிணைக் கைதியாகவும் இருந்த வரலாறு இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

- 1924ம் ஆண்டு செல்லப்பன் அபிராமி தம்பதிக்கு பிறந்தவர் எஸ்.ஆர். நாதன்.
- வறுமையால் நாதனின் தந்தை மலேசியா ரப்பர் தோட்டத்தில் குமாஸ்தா வேலை பார்த்தவர்
- ஆனால் குடும்பத்தை காப்பாற்ற முடியாத நிலையில் எஸ்.ஆர். நாதனின் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
- தந்தையின் தற்கொலைக்குப் பின்னர் நாதனின் குடும்பம் மீண்டும் சிங்கப்பூருக்கே திரும்பியது.
- வறுமையுடன் போராடி உயர்கல்வியை நிறைவு செய்தார் எஸ்.ஆர். நாதன்
- 1955ம் ஆண்டு முதல் சிங்கப்பூர் அரசில் பல்வேறு துறைகளில் பணி புரிந்தார்.
- 1974ம் ஆண்டு சிங்கப்பூர் பாதுகாப்பு, புலனாய்வுத்துறை தலைவராக எஸ்.ஆர்.நாதன் பணிபுரிந்த போது சிங்கப்பூருக்கு சொந்தமான புலாவு புகாம் தீவில் இருந்த எண்ணெய் கிடங்கு மீது ஜப்பான் ரெட் ஆர்மி, பாலஸ்தீன விடுதலை முன்னணியினர் தாக்குதல் நடத்தினர்.
- சிங்கப்பூரில் இருந்து வியட்நாமுக்கு செல்லும் எண்ணெய் விநியோகத்தை நிறுத்தும் நோக்கத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது எண்ணெய் கிடங்கில் இருந்த பணியாளர்கள் பிணைக் கைதிகளாக சிக்கினர்.
- பிணைக் கைதிகளுடன் தீவிரவாதிகள் மத்திய தரைக்கடல் நோக்கி புறப்பட சிங்கப்பூர் கடற்படை மடக்கியது.
- ஆனால் பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டுமெனில் தாங்கள் குவைத்துக்கு பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பது தீவிரவாதிகளின் நிபந்தனை.
- தீவிரவாதிகளின் நிபந்தனைப் படி நான் பிணைக் கைதியாக வருகிறேன்; மக்களை விடுவிக்குமாறு நாதன் வேண்டுகோள் வைத்தார்.
- இதன்படி தீவிரவாதிகளுடன் 13 நாள் பிணைக் கைதியாக இருந்து பின்னர் நாடு திரும்பினார் நாதன்.
- சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவுக்கு நெருக்கமானவராகவும் இருந்ததால் 2-வது தந்தையாக போற்றப்பட்டவர் அதிபர் நாதன்.
- மறைந்த எஸ்.ஆர். நாதனின் உடலுக்கு நாளை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நாடாளுமன்ற வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
- வெள்ளிக்கிழமை மாலை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
- மக்களுக்காக வாழ்ந்த மாமனிதர்!
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications