பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவு! சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம்
வாஷிங்டன்: பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டனாவ் தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் (GFZ) முதற்கட்டமாக இதன் அளவை ரிக்டர் அளவுகோலில் 7.8 என பதிவு செய்துள்ளது. இதையடுத்து பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவின் சில கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இந்த பயங்கரமான நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் கடலோர பகுதிகளை சுமார் 3 மீட்டர் உயரத்தில் அலைகள் தாக்கும் என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கூறியுள்ளது. இந்தோனேசியா, மலேசியாவிலும் கடல் அலைகள் 1 மீட்டர் உயரை எழுந்து ஆக்ரோஷமாக இருக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் இருக்கும் மக்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனினும், நிலநடுக்கம் 8.2 அளவில் பதிவானதாக கூறிய அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம், பின்னர் அதனை குறைத்து 7.8 என்ற ரிக்டர் அளவில் பதிவானதாக கூறியுள்ளது. அமெரிக்க கடலோர பகுதிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் கூறியுள்ளது. அலைகள் சீற்றம் கடுமையாக இருக்கும் என்பதால் கடலோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு இந்தோனெசியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகள் எச்சரித்துள்ளன.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications