பிலிப்பைன்ஸில் ஆக்ரோஷமாக உறுமும் மாயோன் எரிமலை.. ஒருசில நாட்களில் வெடித்து சிதறும் என எச்சரிக்கை!
பிலிப்பைன்ஸில் லாவாக்களை கக்கி வரும் மாயோன் எரிமலை ஒரு சில நாட்களில் வெடித்து சிதறும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video

லீகாஸ்பி: பிலிப்பைன்ஸில் லாவாக்களை கக்கி வரும் மாயோன் எரிமலை இன்னும் ஒரு சில நாட்களில் வெடித்து சிதறும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
பிலிப்பைன்ஸின் அல்பே மாகாணத்தில் உள்ளது மாயோன் எரிமலை. இந்த எரிமலை கடந்த 2 வாரங்களாக சாம்பலையும் கரும் புகை மூட்டத்தையும் கக்கி வருகிறது.
இதனால் எரிமலையை சுற்றி 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 84 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

லாவாக்களை கக்கும் எரிமலை
கடந்த திங்கள் கிழமை பிற்பகலில் இந்த மாயோன் எரிமலை திடீரென வெடித்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக திடீர் திடீர் என வெடித்து லாவாக்களை கக்கியது இந்த மாயோன் எரிமலை.

இரு நகரங்களை மூடிய சாம்பல்
இதனால் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவுக்கு சாம்பல் படிந்தது. எரிமலை வெடிப்பால் கேமலிக் மற்றும் கைனோபட்டன் ஆகிய நகரங்களை சாம்பல் பெருமளவு மூடியது.

அரசின் புதிய திட்டம்
இதைத்தொடர்ந்து மாயோன் எரிமலையை சுற்றியுள்ள நிலப்பரப்பில் மனிதர்கள் வசிக்கக்கூடாது என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த அரசு பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் அங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

ஒரு சில நாட்களின் வெடிக்கும்
இந்நிலையில் இன்னும் ஒருசில நாட்களில் எரிமலை வெடித்து சிதறும் என்று அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

2200 பேர் உயிரிழந்தனர்
இதன்காரணமாக 7 கிலோமீட்டர் சுற்றளவு அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எரிமலை சீற்றம் அதிகரிப்பால் பிலிப்பைன்ஸ் அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த 1814-ம் ஆண்டு மாயோன் எரிமலை வெடித்து சிதறியதில் 2200 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications