ரத்தம்... பலி... வன்முறை தாக்குதல்களுக்கு இடையில் பெத்தலகேம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
ஜெருசலேம்: தீவிரவாத தாக்குதல்களுக்கும், கடும் வன்முறை வெறியாட்டங்களுக்கும் இடையே இயேசு கிறிஸ்து பிறந்த இடமான பெத்தலகேமில் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
உலக அளவில் சுமார் 220 கோடி மக்கள் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றிவரும் நிலையில் மத்திய கிழக்கில் உள்ள சில நாடுகள் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு இந்த ஆண்டு தடை விதித்துள்ளன.
இந்நிலையில், இயேசு கிறிஸ்து பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் உள்ள தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனையில் பங்கேற்க உலகின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

நள்ளிரவு சிறப்பு ஆராதனை:
பெத்தலகேம் நகரின் மங்கர் சதுக்கத்தில் அமைந்துள்ள தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு சிறப்பு ஆராதனையை தலைமை அருட்தந்தை பொவாட் தவால் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

பலியான மக்களுக்கு அர்ப்பணம்:
சமீபகாலமாக, இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே மோதல்களும் அது சார்ந்த உயிரிழப்புகளும் அதிகரித்துவரும் நிலையில் இந்த சிறப்பு ஆராதனையை வன்முறைக்கு பலியான மக்களுக்கு அர்ப்பணிப்பதாக பொவாட் தவால் அறிவித்தார்.

மூன்று பேர் உயிரிழப்பு:
இதற்கிடையே கிறிஸ்துமஸ் தினமான நேற்று மேற்கு கரை பகுதியில் நடைபெற்ற வன்முறை தாக்குதலில் மூன்று பேர் பலியாகினர். இங்குள்ள அகதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தவந்த ஒருவரை இஸ்ரேல் போலீசார் சுட்டுக் கொன்றனர்.

ஐந்து நிமிடம் அணைப்பு:
முன்னதாக, வன்முறை மற்றும் தீவிரவாதத்துக்கு பலியான உயிர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அனைத்து தேவாலயங்களிலும் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரங்களில் ஒளிரும் மின்விளக்குகளை ஐந்து நிமிடங்களுக்கு அணைத்து வைக்கும்படி பொவாட் தவால் உத்தரவிட்டிருந்தார்.

மீண்டும் ஒளிர்ந்த கிறிஸ்துமஸ் மரம்:
அதன்படி, மங்கர் சதுக்கத்தில் இயேசு கிறிஸ்து பிறந்த இடத்தில் உள்ள தேவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்த மின்விளக்குகளும் நேற்றிரவு ஏழு மணிக்கு அணைக்கப்பட்டு, ஐந்து நிமிடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒளிரத் தொடங்கின.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications