விமானத்தில் 3 வயது சிறுமிக்கு முதியவர் பாலியல் தொல்லை: பயணிகளை விமானத்தில் வைத்து பூட்டிய பைலட்
பெர்லின்: ஜெர்மனியில் இருந்து ஸ்பெயினில் உள்ள பால்மா டி மலார்காவுக்கு சென்ற ஏர் பெர்லின் விமானத்தில் 3 வயது சிறுமிக்கு 61 வயது முதியவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
ஜெர்மனியில் உள்ள டுசல்டார்ப் நகரில் இருந்து ஏர் பெர்லின் விமானம் ஸ்பெயினில் உள்ள பால்மா டி மலார்காவுக்கு சென்றது. விமானத்தில் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள மால்டோவாவை சேர்ந்த 61 வயது முதியவர் 3 வயது மகளுடன் பயணம் செய்த பெண் அருகே அமர்ந்திருந்தார். அந்த பெண் தூங்கிய நேரத்தில் அவரின் 3 வயது மகளை கண்ட இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதை பார்த்த விமான பணிப்பெண் உடனே விமானியிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து விமானி இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். ஞாயிற்றுக்கிழமை மதியம் விமானம் மஜோர்காவில் தரையிறங்கியது.
போலீசார் அந்த நபரை கைது செய்ய ஏதுவாக அவர்கள் விமானத்திற்குள் நுழையும் வரை யாரும் வெளியே செல்லாதவாறு விமானி விமானத்தின் கதவை பூட்டிவிட்டார். போலீசார் வந்து அவரை கைது செய்து அழைத்துச் சென்ற பிறகே பிற பயணிகள் விமானத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 3 வயது சிறுமிக்கு முதியவர் பாலியல் தொல்லை அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications