நானும், அபாட்டும் போட்டோகிராபர் ஆகிட்டோம்: இன்ஸ்டாகிராமில் மோடி
கான்பெர்ரா: நானும், ஆஸ்திரேலிய பிரதமர் அபாட்டும் போட்டோகிராபர்களாகிவிட்டோம் என்று கூறி பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ட்விட்டர், ஃபேஸ்புக்கில் கணக்கு துவங்கி தனது அன்றாட நடவடிக்கைகள் பற்றி அவ்வப்போது தெரிவித்து வரும் பழக்கம் கொண்டவர் பிரதமர் நரேந்திர மோடி. இந்நிலையில் அவர் கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கினார்.

ஆசியான் உச்சி மாநாட்டில் எடுத்த புகைப்படத்தை முதன்முதலில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். இந்நிலையில் அவர் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
நானும், அபாட்டும் போட்டோகிராபர்களாகிவிட்டோம் என்று தலைப்பிட்ட அந்த புகைப்படத்தை போட்ட வேகத்தில் 8 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் மோடிக்கு 1 லட்சத்து 17 ஆயிரத்து 246 ஃபாலோயர்கள் உள்ளனர். ட்விட்டரில் அவருக்கு சுமார் 8 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். தன்னை போன்றே சமூக வலைதளங்களை பயன்படுத்துமாறு அவர் அமைச்சர்களை ஊக்குவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications