நேருவின் 125வது பிறந்தநாளை கொண்டாடிய மோடி: டிவிட்டரில் புகழ் அஞ்சலி
மெல்போர்ன்: பண்டித ஜவகர்லால் நேருவின் 125வது பிறந்தநாளை ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார் பிரதமர் மோடி. டிவிட்டரில் நேருவுக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரும், விடுதலை போராட்ட வீராருமான நேருவின் 125ஆவது பிறந்தநாள் விழா இன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
I wrote on the selfie with my young friends at QUT...Today is 14th November, Pandit Nehru's birthday. My good wishes to children.
— Narendra Modi (@narendramodi) November 14, 2014 ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் மோடி அங்கிருந்தவாறு தனது டிவிட்டர் இணைய தளம் மூலம் புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார். இன்று நமது முதலாவது பிரதமர் நேருவின் 125ஆவது பிறந்த நாள். இந்த நாளில் அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். சுதந்திர போராட்டத்தில் அவரது பங்கை நாம் நினைவு கூறுவோம் என்று குறிப்பிட்டு உள்ளார்.
பிரிஸ்பேன் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மேல் சட்டையும் பேண்ட்டும் அணிந்து குழந்தைகளுடன் கொண்டாடினார். ‘‘மாமாநேரு பிறந்த நாளில் குழந்தைகளுடன் இருப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்'' என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
நேருவின் பிறந்தநாளை மோடி எதிர்ப்பு தினமாக காங்கிரஸ் கட்சி கொண்டாடி வரும் நிலையில் நேருவின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் மோடி.












Click it and Unblock the Notifications