ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்... அயர்லாந்திடம் ஆதரவு கோரினார் மோடி
டூப்ளின் : ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் இடமளிக்க ஆதரவளிக்குமாறு அயர்லாந்திடம் பிரதமர் மோடி ஆதரவு கோரியுள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடி அயர்லாந்து மற்றும் அமெரிக்காவில் 7 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். அதற்காக நேற்று (செவ்வாய்) மாலை டெல்லியில் இருந்து அயர்லாந்துக்கு புறப்பட்டு சென்றார்.

இதன்மூலம் 60 ஆண்டுகளுக்கு பிறகு அயர்லாந்து சென்ற இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார். தலைநகர் டூப்ளின் சென்ற அவருக்கு விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் லியோ வரத்கர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அயர்லாந்து பிரதமர் என்டா கென்னியை மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இருவரும் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது...
ஐரோப்பா மற்றும் ஆசியாவில் பயங்கரவாதம், தீவிரவாதம் உட்பட சர்வதேச சவால்களை சமாளிப்பது பற்றி பேச்சு நடத்தினோம். ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் பதவி பெறுவதற்கு அயர்லாந்து ஆதரவு அளிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்தியா நிரந்தர உறுப்பினரானால் இருதரப்பு உறவும் ஆழமாவதுடன், சர்வதேச பிரச்சனைகள் மற்றும் ஆயுத பரவலை கட்டுப்படுத்த வகை செய்யும்.
இதேபோல் உலகளாவிய அணு ஆயுத குறைப்பில் இந்தியாவின் குரல் எப்போதும் ஓங்கி ஒலிக்கிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அயர்லாந்தின் விசா நடைமுறைகளில் மாற்றம் தேவை"இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications