ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாக். பிரதமர் இம்ரான்கானிடம் பிரதமர் மோடி பேச வாய்ப்பில்லை!
பிஷ்கேக்: கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கேக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு, வரும் 13-ந் தேதி தொடங்குகிறது.
இந்த மாநாட்டின்போது சீன அதிபர் ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச உள்ளார்.

சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி, பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பை உறுதி செய்துள்ளார். இதேபோல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினையும் பிரதமர் மோடி மாநாட்டின் போது சந்தித்து பேசவுள்ளார்.
இதனை வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளரான ரவீஷ்குமாரும் உறுதி செய்துள்ளார். ஆனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் இந்திய பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து எந்த திட்டமும் இதுவரை வகுக்கப்படவில்லை என்றும் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் கூறியுள்ளார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கடந்த 2017ஆம் ஆண்டுதான் இணைக்கப்பட்டன. இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் தங்களின் பிரச்சனைகள் இந்த அமைப்பின் பன்முகத் தன்மைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என உறுதியளித்தப்பின்னரே இணைக்கப்பட்டன.
இந்நிலையில் பிஷ்கேக்கில் நடைபெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்காக அப்போதைய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சென்றபோது திறந்துவிடப்பட்டது. பாலகோட் தாக்குதலுக்கு பிறகு இந்தியாவுக்கான வான் வழிப்பாதையை மூடியது பாகிஸ்தான்.
தற்போது பிரதமர் மோடியின் விமானம் ஜூன் 13ஆம் தேதி இஸ்லாமாபாத் வழியாக செல்ல அனுமதி கேட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பிரதமர் மோடியின் விமானம் செல்ல பாகிஸ்தான் அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவுக்கான வான்வழிப்பாதையை பாகிஸ்தான் மூடியுள்ளதால் இந்தியர்கள் பலரும் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பேசுவார் என கூறப்படுகிறது. ஆனால் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் இதனை உறுதிபடுத்தவில்லை.
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
கண்கள் சிவந்த டிரம்ப்.. பாகிஸ்தான் எடுக்கும் முடிவு.. ஆனால் "அந்த" ஒரு சிக்கல் இருக்கே! அடுத்து என்ன -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications