முகர்ந்தாலே மரணம்.. அமெரிக்காவின் பெண்டகனுக்கு வந்த 2 மர்ம பார்சல்.. மாபெரும் சதி அம்பலம்!
அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனுக்கு வந்த பார்சல் ஒன்றின் காரணமாக, அந்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாகி உள்ளது.
நியூயார்க்: அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனுக்கு வந்த பார்சல் ஒன்றின் காரணமாக, அந்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாகி உள்ளது.
அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன்தான் உலகிலேயே பாதுகாப்பான ராணுவ தலைமையிடம் என்று அழைக்கப்படுகிறது. அதேபோல் அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு அடுத்து பெண்டகன்தான் அதிக வலிமை பொருந்திய இடம் ஆகும்.
இந்த நிலையில் இந்த பெண்டகனுக்கு விஷ பார்சல் ஒன்று வந்துள்ளது. இரண்டு முக்கிய அதிகாரிகளுக்கு யாரோ விஷ பார்சல் அனுப்பி இருக்கிறார்கள்.

என்ன உள்ளே
இந்த பார்சல் உள்ளே சிறிய அளவில் பவுடர் கொஞ்சம் இருந்துள்ளது. பார்க்க வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்த பவுடர் மிக மோசமான விஷம் ஆகும். இந்த பாய்சன், ரெசின் போன்ற ஒருவகை பாய்சன் ஆகும். இது ஆளை கொல்ல கூடியது.

யாருக்கு அனுப்பப்பட்டது
இப்படி மொத்தம் இரண்டு பார்சல்கள் வந்துள்ளது. ஒன்று அமெரிக்க பாதுகாப்பு படையின் செயலாளர் ஜேம்ஸ் மேட்டிஸுக்கும் இன்னொன்று அட்மிரல் ஜான் ரிச்சர்ட்சனுக்கும் வந்துள்ளது. இவர்கள் இருவரும் அமெரிக்க ராணுவத்திலும், பாதுகாப்பு படையில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள். இதன் காரணமாகவே இந்த சம்பவம் பெரிதாகி உள்ளது.

முகர்ந்தால் உயிர் போய்விடும்
இந்த ரெசின் வகையான விஷங்களுக்கு உலகில் எங்கும் மருந்து கிடையாதாம். இதை குண்டுகளில் தடவி பயன்படுத்தலாம். ஊசியில் தடவியும் பயன்படுத்தலாம். ஆனால் இந்த பார்சலில் இருந்த ரெசின் முகர்ந்து பார்த்தாலே மயக்கம் வர வரவைக்கும் பவுடர் வகையானது. இது 48 மணி நேரத்தில் உயிரையே பறிக்க வைக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

யார் என்று விசாரணை
இந்த நிலையில் இந்த பிரச்சனையை மிகவும் பெரிதாக விசாரிக்க இருக்கிறது அமெரிக்க அரசு. இதற்காக ஏற்கனவே சிறப்பு விசாரணை குழுவை உருவாக்கி உள்ளது. இதை எந்த நாடு செய்திருக்குக்கும் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் இந்த வேலையை செய்து இருக்குமா என்று விசாரித்து வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications