அமீரகத்தில் இன்று பொங்கல் விழா: தங்க மீன்கள் சாதனா கௌரவிப்பு
துபாய்: அமீரகத்தில் உள்ள ராசல் கைமாவில் இன்று பொங்கல் விழா நடைபெற உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ராசல்கைமா தமிழ் மன்றம் நடத்தும் பொங்கல் விழா இன்று நடைபெறுகிறது.
மாலை 7 மணிக்கு துவங்கும் விழா ராசல்கைமாவில் உள்ள மனார் மால் அருகே இருக்கும் ஆர்.ஏ.கே. கலாச்சார மையத்தில் நடைபெறுகிறது.
சின்னத்திரையினரின் சிறப்பு நிகழ்ச்சி, குழந்தைகள் நடனம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த விழாவில் தேசிய விருது பெற்ற தங்கமீன்கள் புகழ் செல்வி சாதனா கௌரவிக்கப்பட உள்ளார்.
விழாவில் விஷ்ணு, விஜய் டிவி கலைஞர்கள் மற்றும் சூப்பர் சிங்கர்ஸ் தங்கதுரை, ஜெயச்சந்திரன், விக்னேஷ் கார்த்திக், ரிஜ்வான், வைஜயந்தி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த விழா பற்றி மேலும் விபரம் அறிய விரும்புவோர் திரு. காஜா - 050 5303235, திரு. மணிகண்டன் - 055 5371215, திரு. மாசானராஜ் - 055 9616377, திரு. பூபதி - 050 7501359 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.