விடைபெறுகிறார் போப் பிரான்சிஸ்.. இறுதி சடங்கு வரும் சனிக்கிழமை நடைபெறும் என வாடிகன் அறிவிப்பு!
வாடிகன்: கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் நேற்று காலமானார். இதற்கிடையே போப் இறப்பிற்குப் பிறகு அவருடைய படங்களை வாடிகன் வெளியிட்டுள்ளது. மேலும், போப் பிரான்சிஸுக்கு வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 26) இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு முதல் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராகப் போப் பிரான்சிஸ் இருந்து வந்தார். 88 வயதான இவருக்குக் கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தது.

இருப்பினும், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தில் அவர் வீல் சாரில் வந்து மக்களை சந்தித்தார். அவரது உடல்நிலை சீராகி வந்ததாகவே பலரும் கருதினர். யாரும் எதிர்பாராத விதமாக மறுநாள், அதாவது நேற்று ஏப்ரல் 21ம் தேதி அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். வாடிகன் நகரில் இருந்த போப் பிரான்சிஸ் நேற்று காலை காலமானதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே இறப்பிற்குப் பிறகு போப் பிரான்சிஸின் படங்களை வாடிகன் வெளியிட்டுள்ளது. போப் பிரான்சிஸ் உடலை வாடிகன் வெளியுறவுச் செயலாளர் ஜெபிப்பதைப் போன்ற வீடியோவை வாடிகன் வெளியிட்டுள்ளது. சிவப்பு அங்கிகளுடன், பிஷப்ப் ஆடை போப் பிரான்சிஸுக்கு அணிவிக்கப்பட்டு, அவர் வசித்த சாண்டா மார்டா இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது அதில் தெரிகிறது.
மேலும், போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. பொதுவாக போப் இறந்தால் 4 முதல் 6 நாட்களில் இறுதிச் சடங்கு நடத்த வேண்டும். இதற்கிடையே போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு வரும் ஏப்ரல் 26ம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என்று வாடிகன் அறிவித்துள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications