அர்ஜெண்டினாவில் அதிகாலையில் குலுங்கிய வீடுகள்..சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..6.5 புள்ளி ரிக்டர் ஆக பதிவு
பியூனெஸ் அயர்ஸ்: அர்ஜெண்டினா இன்று அதிகாலையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கால் வீடுகள் அதிர்ந்தன. ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. உறங்கிக்கொண்டிருந்த மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் இன்று அதிகாலை 3.39 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் அந்நாட்டின் கார்போடா பகுதியில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவானதாக நில அதிர்வுக்கான தேசிய மையத்தின் ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை நேரத்தில் சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications