நாளை உலக பொருளாதார மன்ற கூட்டம் தொடங்குகிறது.. பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்
பெர்ன்: சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் கூட்டத்தில் காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பேச உள்ளார்.
ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டு உலக பொருளாதார மன்றம் எனப்படும் வேர்ல்டு எக்கனாமிக் பாரம் எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு 1971ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த க்லெளஸ் ஸ்வாப் எனும் பொருளாதார பேராசிரியரால் நிறுவப்பட்டது.
உலகின் முக்கியம்வாய்ந்த அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் பங்குபெறும் இந்த அமைப்பின் கூட்டத்தில் சுற்றுபுறசூழல், மக்கள் சுகாதாரம் மற்றும் ஏனைய உலக பிரச்சனைகளை பற்றி கலந்துரையாடல் நடத்தப்படும்.

WEF மாநாடு
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள், தனியார் அமைப்புகள், சிஇஓக்கள் உறுப்பினராக உள்ள இந்த அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் டாவோசில் வருடாந்திர கூட்டத்தை கடந்த 50 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. கொரோனா தொற்று காரணமாக 2021ஆம் ஆண்டு இந்த அமைப்பின் கூட்டம் நடைபெறாத நிலையில் இந்த அமைப்பின் இந்த ஆண்டுக்கான டாவோஸ் உச்சிமாநாடு ஆன்லைனில் நடைபெறுகிறது.

2022ஆம் ஆண்டு கூட்டம்
உலகின் முக்கிய தலைவர்கள் உலகின் நிலை என்ற கருப்பொருளில் 2022 ஆம் ஆண்டுக்கான தங்கள் பார்வைகளை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி நிரல் இருக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில் பல நாடுகளில் முக்கிய தலைவர்கள் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் பொருளாதாரத்தில் எதிர்கொள்ள உள்ள சவால்கள் மற்றும் அவற்றை எவ்வாறு எதிர் கொள்வது என்பது குறித்து காணொளிக்காட்சி முறையில் இந்தக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளனர்.

பிரதமர் மோடி உரை
ஜனவரி 17 ஆம் தேதியான திங்கட்கிழமை சீன அதிபர் ஜின்பிங் சிறப்பு உரையுடன் ஒரு வார கால டிஜிட்டல் உச்சிமாநாடு தொடங்க உள்ள நிலையில் திங்கட்கிழமை மாலை பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை ஆற்றுகிறார். அதை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டனியோ குட்டரேஸ் உரை நிகழ்த்துவார்.

உலக தலைவர்கள் பங்கேற்பு
இஸ்ரேலிய பிரதமர் நஃப்தலி பென்னட் மற்றும் ஜப்பான் பிரதமர் கிஷிடா ஃபுமியோ ஆகியோர் செவ்வாயன்று தங்களின் சிறப்பு உரைகளை வழங்க உள்ளனர். மேலும் WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைவர் ஆதார் பூனாவல்லா , ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் , ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் , இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ, ,ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ,நைஜீரியாவின் துணை ஜனாதிபதி யெமி ஒசின்பாஜோ, அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் எல் யெலன், IMF நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் ஆகியோரும் கூட்டத்தில் உரையாற்றவுள்ளனர்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications