தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி அமெரிக்காவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப்போட்டிகளை நடத்தக்கோரி அமெரிக்காவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் குடும்பம் குடும்பமாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வலியுறுத்தி அமெரிக்காவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய பாதகைகளை அவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதனைக் கண்டித்து தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற.

இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரின் வெப்ஸ்டர் பகுதியில் போராட்டம் நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள அமெரிக்க தமிழகர்கள் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதாகைகளையும் அவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.












Click it and Unblock the Notifications