காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதம்.. சவுதி அரேபியாவில் செந்தமிழர் பேரவை போராட்டம்
சவுதி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், சவுதியில் செந்தமிழர் பேரவை சார்பில் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது.
சவூதி செந்தமிழர் பேரவை நேற்று, வெள்ளிக்கிழமை சவுதி அல்அசா மண்டலத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழர்கள் ஒன்றுகூடி தங்கள் எதிர்பை தெரிவித்தனர். மற்றும் தூத்துக்குடி அருகே, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவும் போராட்டங்கள் சவூதி சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடைபெற்று முடிந்தது.

"உலகில் பரவி வாழும் தமிழ் இனத்துக்கு இன்னல் ஏற்பட்டால் அதற்காக கண்டிப்பாக ஒன்று கூடுவோம். சாதி மதத்தால் பிரிந்து கிடந்த தமிழ் சமூகத்தை தமிழ் மொழியால் தற்போது உள்ளது இனி நாங்கள் ஒன்றுமையாக இருந்து தமிழ் இனத்தை இனிய அழிய விடமாட்டோம்" என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
படங்கள் உதவி: ரவி- சவுதி அரேபியா.













Click it and Unblock the Notifications