ஆம்.. ஜெய்ஷ் இ முகமதுதான் புல்வாமாவில் தாக்கியது.. கொடூர தாக்குதல் பற்றி முஷாரப் பரபர பேட்டி!
புல்வாமாவில் இந்திய சிஆர்பிஎப் படைவீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது அமைப்புதான் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
Recommended Video

இஸ்லாமாபாத்: புல்வாமாவில் இந்திய சிஆர்பிஎப் படைவீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது அமைப்புதான் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் மொத்தம் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்திற்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விளக்கம் அளித்து இருந்தார்.
தற்போது இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். இந்த தாக்குதல் தொடர்பான பல உண்மைகளை அவர் இந்தியா டுடே செய்தி நிறுவனத்திற்கு பேட்டியாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

மோடி அக்கறை
முஷாரப் தனது பேட்டியில், மோடிக்கு இந்திய வீரர்கள் மீது உண்மையான அக்கறை கிடையாது. அவர் நன்றாக நடிக்கிறார். பாகிஸ்தான் மீது தேவையில்லாமல் குற்றஞ்சாட்டி வருகிறார். இந்தியா பாகிஸ்தானில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது என்பதே மிகப்பெரிய பொய். இது போன்ற பொய்களை பரப்ப வேண்டாம்.

வருத்தம்
புல்வாமா தாக்குதல் மிகவும் வருந்ததக்க விஷயம். மிக மோசமான விஷயம் அது. அதில் சந்தேகமே இல்லை. நான் சொல்கிறேன் இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மீது கருணையே காட்ட கூடாது. ஜெய்ஷ் இ முகமது அமைப்பு மீதும், மசூத் அசார் மீதும் கொஞ்சம் கூட கருணை காட்ட கூடாது.

யார் செய்தது
அதே சமயம் இதில் பாகிஸ்தான் மீதும் குற்றஞ்சாட்ட கூடாது. பாகிஸ்தானுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. பாகிஸ்தான் அரசு இதில் தலையிடவில்லை. இந்தியா மிக மிக தவறாக பாகிஸ்தான் மீது குற்றஞ்சாட்டி வருகிறது. இந்த தாக்குதலை நடத்தியது ஜெய்ஷ் இ முகமது அமைப்புதான். அவர்கள் என்னையே கொல்ல பார்த்தவர்கள்.

பாகிஸ்தான் பிரச்சனை
இந்தியா இதை முதலில் நிறுத்த வேண்டும். இந்தியாதான் பாகிஸ்தானை இரண்டாக துண்டாடியது. அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் ஆதரவு கிடைக்கும் என்று இந்தியா இப்படி செய்கிறது. ஆனால் இதனால் யாருக்கும் எந்த பலனும் கிடையாது. இந்தியா தனது நிலையை மாற்ற வேண்டும்., என்று முஷாரப் தெரிவித்துள்ளார்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications