தெற்கு அட்லான்டிக் கடலில் பயங்கர நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
லண்டன்: இங்கிலாந்தின் ஃபால்க்லேண்ட்ஸ் தீவுகளுக்கு தென்கிழக்கே தெற்கு அட்லான்டிக் கடற்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் ஃபால்க்லேண்ட்ஸ் தீவுகளுக்கு தென்கிழக்கே தெற்கு அட்லான்டிக் கடற்பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகி இருந்தது.
இந்த நிலநடுக்கம் ஃபால்க்லேண்ட்ஸ் தீவுகளின் தலைநகரமான ஸ்டான்லியில் இருந்து 320 கிமீ தொலைவில் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்டது. மேலும் 15 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் சக்திவாய்ந்ததாக இருப்பினும் இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications