ஓரினச் சேர்க்கை குற்றம்: ‘நவீன கணினியியலின் தந்தைக்கு’ 60 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னிப்பு

Subscribe to Oneindia Tamil

லண்டன்: ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப் பட்ட நவீன கணினியியலின் தந்தைக்கு கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜ மன்னிப்பு வழங்கப் பட்டுள்ளது.

நவீன கணினியியலின் தந்தை என வர்ணிக்கப் பட்டவர் ஆலன் ட்யூரிங்க் என்ற பிரிட்டிஷ் கணிதவியலாளர். இவர் மீது ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப் பட்ட அவர், அங்கேயே தற்கொலை செய்து கொண்டார்.

அவரது நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்க நீண்ட காலமாகவே பலர் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு மன்னிப்பு வழங்கி உத்தரவிடப் பட்டுள்ளது.

எனிக்மா....

எனிக்மா....

இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மானியர்கள் பயன்படுத்திய "எனிக்மா" என்ற சங்கேதக் குறியீட்டு மொழியை கட்டுடைப்பதில் முக்கிய பங்காற்றியவர் நவீன கணினியியலின் தந்தை என்று வர்ணிக்கப்படுகின்ற பிரிட்டிஷ் கணிதவியலாளர் ஆன டாக்டர் ஆலன் ட்யூரிங்க்.

சிறைத்தண்டனை....

சிறைத்தண்டனை....

1952ம் ஆண்டு, இவருக்கு ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டவர் என்ற குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். இதனை அடுத்து அவருக்கு இருந்த பாதுகாப்பு அனுமதிகள் விலக்கிக்கொள்ளப்பட்டன.

தற்கொலை....

தற்கொலை....

சிறையில் அவருக்கு ஆண்மை நீக்கும் சிகிச்சை அளிக்கபட்டது. அதனைத் தொடர்ந்து, சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட இரண்டாண்டுகளுக்குப் பின்னர் ட்யூரிங் சயனைட் விஷம் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராஜமன்னிப்பு...

ராஜமன்னிப்பு...

அவரது மரணம் ஒரு தற்கொலை என்று மரண விசாரணையில் தீர்ப்பளிக்கப்பட்டது. நவீன கணினியியலின் தந்தையான இவர் மீது விழுந்த அவப்பெயரை நீக்க பிரதமர் டேவிட் கேமரூன் அரசாங்கம் அரசாங்கம் முன்வைத்த வேண்டுகோளை அடுத்து இங்கிலாந்து ராணி எலிசபத் அவருக்கு மன்னிப்பு வழங்கியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+