Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரஸ்ஸல்ஸில் பலியான ராகவேந்திரன் கணேசனின் உடல் ஆம்ஸ்டர்டாமில் இருந்து சென்னை வந்தது

Subscribe to Oneindia Tamil

பிரஸ்ஸல்ஸ்: பிரஸ்ஸல்ஸ் மெட்ரோ ரயில் தாக்குதலில் பலியான இன்போசிஸ் ஊழியர் ராகவேந்திரன் கணேசனின் உடல் ஆம்ஸ்டர்டாமில் இருந்து இன்று மதியம் சென்னை வந்தது.

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் பணியாற்றி வந்தவர் சென்னையை சேர்ந்த இன்போசிஸ் ஊழியர் ராகவேந்திரன் கணேசன். அவர் கடந்த 22ம் தேதி மெட்ரோ ரயிலில் பணிக்கு சென்றபோது அதே ரயிலில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தார்.

Raghavendran Ganesan's mortal remains to reach Chennai today

இதில் ராகவேந்திரன் கணேசன் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துவிட்டதால் அவரது பெயர் மாயமானவர்களின் பட்டியலில் இருந்தது.

இந்நிலையில் பிரஸ்ஸல்ஸ் சென்ற அவரது பெற்றோர் மற்றும் தம்பி அவரின் உடலை அடையாளம் காட்டினர். இதையடுத்து கணேசனின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கணேசனின் உடல் ஆம்ஸ்ட்ர்டாம் எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் இன்று மதியம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடல் சென்னை சிட்லபாக்கத்தில் உள்ள அவரது மனைவி வைஷாலியின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இன்று மாலையே இறுதிச் சடங்கு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+