துபாயில் புனித லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சி! நாளை நடத்துகிறது துபாய் ஈமான் அமைப்பு!
துபாயில் புனித லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சி ஈமான் அமைப்பு சார்பில்நாளை நடைபெறுகிறது.
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் ஈமான் அமைப்பு புனித லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சியை ஹிஜ்ரி 1438 ரமலான் பிறை 27, 21 ஜுன் 2017 புதன்கிழமை இரவு 10 மணிக்கு தமிழ் பஜாரில் அமைந்துள்ள லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளியில் ) நடைபெற இருக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான் தலைமை வகிக்கிறார். கோவை கரும்புக்கடை பள்ளிவாசல் தலைமை இமாம் கோவை அப்துல் அஜீஸ் பாகவி ஹழ்ரத் கிப்லா சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து ஜிக்ர், தவ்பா மற்றும் துஆ உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறும். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் விழாக்குழு செயலாளர் ஜமால் முகைதீனை 055 800 79 09 / 050 51 96 433 தொடர்புக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications