குளியலறையில் சுயநினைவின்றி கிடந்த அமெரிக்க நடிகை: வழக்கில் புதிய திருப்பம்!
நியூயார்க்: குளியல் அறையில் சுயநினைவின்றி நிர்வாண நிலையில் கிடந்த அமெரிக்க நடிகை போதை மருந்து பயன்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அமெரிக்காவின் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோ நடிகை பாபி கிறிஸ்டினா பிரவுன். 21 வயதான இவர் கடந்த சனிக்கிழமை காலை தனது வீட்டில் உள்ள குளியலறை தொட்டியில் சுயநினைவின்றி தலை தொங்கிய நிலையில் கிடந்தார்.

நடிகையின் கணவர் நிக் கார்டன், அவரை மீட்டு ஆம்புலன்சில் வடக்கு புல்டன் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.
கிறிஸ்டினா மூளை வீக்கம் காரணமாக கோமாவில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனையடுத்து கிரிஸ்டினாவை, ஞாயிறன்று அட்லாண்டா மருத்துவமனைக்கு மாற்றினர். தற்போது அங்கு கிரிஸ்டினாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தாயைப் போலவே
2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி அவரது தாய் விட்னி ஹஸ்டன் இதே போல் ஹில்ஸ் ஹில்டன் ஹோட்டல் குளியலறை தொட்டியில் தலை தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அவரின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலிக்கு சில தினங்களுக்கு முன் கிறிஸ்டினாவுக்கு இப்படி நடந்துள்ளது அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
போதை பழக்கத்தில்
கிறிஸ்டினாவின் 18 ஆவது பிறந்த நாளின் போது கொக்கைன் உபயோகித்ததாக சர்ச்சை எழுந்தது. அவரது தாயின் முதலாமாண்டு நினைவு தினத்திற்கு சில தினங்களுக்கு பிறகு மதுவில் போதை மருந்தை கலந்து குடித்ததால் மயங்கி விழுந்தார். அவர் மயக்கமுற்று ஸ்ட்ரெச்சரில் வீட்டுக்கு எடுத்து செல்லப்படும் புகைப்படம் ஊடகங்களில் வெளியானது.
போலீஸ் சோதனை
எனவே, அவர் போதை மருந்து பயன்படுத்தியதால்தான் இப்போது குளியலறை தொட்டியில் விழுந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. ஆனால், கிறிஸ்டினாவின் வீட்டில் சோதனை நடத்திய காவல்துறையினர் எந்த போதைப்பொருளும் இல்லை என்று தெரிவித்தனர்.
போதை குற்றவாளி
இந்நிலையில், காவல்துறை பதிவேட்டின் படி கிறிஸ்டினாவை அவரது கணவர் நிக் கார்டன் மருத்துவமனைக்கு அனுப்பிய போது, அவரது நண்பரான மேக்ஸ்வெல் லோமாஸ் அவருடன் இருந்தது தெரிய வந்துள்ளது. இவர் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி போதை மருந்து குற்றத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு 15000 டாலர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதும் காவல் துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கிறிஸ்டினா மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் அவரிடம் இது பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications