ரியோ ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக தொடங்கியது : வண்ணமயமான வான வேடிக்கை
ரியோ டி ஜெனிரோ : உலகமே ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் கோலகலமாக தொடங்கியது. மரக்கானா கால்பந்து மைதானத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள், லேசர் ஒளிவிளக்கு நடனங்கள், வண்ணமயமான வான வேடிக்கைகளை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன்படி 31வது ஒலிம்பிக் திருவிழா பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் தொடக்க விழா கால்பந்து மைதானமான மரக்கானாவில் அந்த நாட்டின் நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கியது. இது இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணியாகும்.

தென்அமெரிக்காவில் அரங்கேறும் முதல் ஒலிம்பிக்கான இதில் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பல்வேறு உணர்வு பூர்வமான கலை நிகழ்ச்சிகள், அதிரடி நடனங்கள், சாகசங்கள் மற்றும் லேஷர் ஷோ, வண்ணமயமான வாணவேடிக்கை உள்ளிட்டவை நடைபெற்றது.
இந்த விழாவில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இவர்கள் 28 வகையான விளையாட்டில் 306 பந்தயங்களில் பதக்கத்தை வெல்ல ஆயத்தமாகி வருகிறார்கள்.
ஐ,நா. சபை தலைவர் பான் கீ மூன் உட்பட உலக தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், ரசிகர்கள் என்று மொத்தம் 78 ஆயிரம் பேர் தொடக்க விழாவை கண்டுரசித்தனர்.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர். ஒலிம்பிக் பிறந்த கிரீஸ் நாட்டு வீரர்கள் முதலில் கொடி அணிவகுப்பு நடத்தினர். போர்ச்சுக்கள் மொழி அகர வரிசைப்படி கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
இப்பட்டியலில் இந்தியா 95வது இடத்தில் உள்ளது. ஒலிம்பிக்கில் முதல் முறையாக 10 பேர் கொண்ட அகதிகள் அணி கலந்து கொள்கின்றனர். போட்டியை நடத்தும் பிரேசில் அணிவகுப்பில் கடைசியாக அணிவகுப்பில் இடம் பெற்றுள்ளது. அதற்கு முன்பாக அகதிகள் அணி அணிவகுத்து சென்றது.












Click it and Unblock the Notifications