இறுகும் பிடி.. சோனியா மருமகன் ராபர்ட் வதேராவிடம் 3வது நாளாக விசாரணை.. மனைவி பிரியங்கா செய்த செயல்
டெல்லி: ஹரியானா மாநிலம் குருகிராம் நில மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான தொழிலதிபர் ராபர்ட் வதேரா 3 வது நாளாக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலக விசாரணைக்கு ஆஜரானார். அவரை பிரியங்கா காந்தி அமலாக்கத்துறை அலுவலகம் வரை வந்து தோளில் தட்டிக்கொடுத்து அனுப்பி வைத்தார்.
காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா. பிரியங்கா காந்தியின் கணவரான இவர் மீது மோசடி வழக்கு உள்ளது. அதாவது ஹரியானா மாநிலம் குருகிராம் நிலமோசடி தொடர்பான பணமோசடி வழக்கு ராபர்ட் வதேராவுக்கு எதிராக உள்ளது.

தொழிலதிபர் ராபர்ட் வதேராவின் நிறுவனம் ஷிகோபுரில் கடந்த 2008, பிப்ரவரியில் ஒம்காரேஷ்வர் பிராப்பர்ட்டிஸ் பிரைவேட் லிமிடெட்டில் ரூ. 7.5 கோடிக்கு வாங்கியது. பின்பு அந்த நிலம் டிஎல்எஃப்-க்கு ரூ.58 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கையே அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதில் பணமோசடி நடந்திருப்பதாக அமலாக்கத்துறை கருதுகிறது.
இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து ராபர்ட் வதேரா நேற்று முன்தினம் முதல் நாள் ஆஜரானார். அதன்பிறகு நேற்று 2வது நாளாக ஆஜரானார். அவரிடம் 2 நாட்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மொத்தம் 10 மணிநேரத்துக்கும் மேலாக விசாரணை நடந்தது.
இதையடுது்து 3வது நாள் விசாரணைக்கு இன்று டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா ஆஜரானார். அவருடன் மனைவி பிரியங்கா காந்தியுடன் வந்திருந்தார். நேற்றைய தினம் 2வது நாள் விசாரணையின்போது பிரியங்கா காந்தி ராபர்ட் வதேராவை கட்டியணைத்து அன்பை பரிமாறி அமலாக்கத்துறை அலுவலகத்துக்குள் அனுப்பி வைத்தார்.
அதேபோல் இன்றைய தினம் ராபர்ட் வதேராவுடன் வந்த பிரியங்கா காந்தி அவரது தோளில் தட்டி தைரியம் கொடுத்தார். அதன்பிறகு தான் ராபர்டர் வதேரா அங்கிருந்தவர்களை நோக்கி கையசைத்து அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். இந்த தொடர் விசாரணை என்பது ராபர்ட் வதேராவுக்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications