ரஷ்யாவில் கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு.. ஸ்பெயினை முந்தும் வேகம்
மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அந்த நாடு தற்போது இரண்டாவது நிலையில் இருக்கும் ஸ்பெயினை பின்னுக்கு தள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
Recommended Video
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41 லட்சத்தை தாண்டியது. அதாவது 41,00,609 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 2,80,431 ஆக உள்ளது. கொரோனாவால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 14,39,842 ஆக உள்ளது.
மருத்துவமனையில் 23 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த எண்ணிக்கையில் 47 ஆயிரம் பேரின் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இத்தாலி
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 13 லட்சத்தை தாண்டியது. அதாவது 13,47,309 ஆக உள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியது. ஸ்பெயினில் 2,62,783 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 26,478 பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர். இத்தாலியில் கொரோனாவால் 2,18,268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பலியானோர் எண்ணிக்கை 30, 395 ஆக உள்ளது.

பிரான்ஸ்
பிரிட்டனில் 2,18,268 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பலியானோர் எண்ணிக்கை 31,587 ஆக உள்ளது. அது போல் பிரான்ஸில் 176,658 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பலியானோர் எண்ணிக்கை 26,310 ஆக உள்ளது. ஜெர்மனியில் 1,71,324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,549 பேர் பலியாகிவிட்டனர்.

சிங்கப்பூர்
பிரேசிலில் கொரோனாவால் 1,56,061 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 10,656 பேர் பலியாகிவிட்டனர். பாகிஸ்தானில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,736 ஆக உள்ளது. பலி எண்ணிக்கை 636 ஆக உள்ளது. அது போல் சிங்கப்பூரில் 22,640 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு இதுவரை 20 பேர் பலியாகிவிட்டனர்.

உபகரணங்கள்
ரஷ்யாவில் 1,89,676 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு கொரோனாவால் 1,827 பேர் பலியாகிவிட்டனர். இங்கு 31 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். இங்கு கொரோனா பாதிப்பு வேகமாக உள்ளது. பிரேசிலில் மருத்துவ உபகரணங்கள் இல்லை என கூறப்பட்டது. ஆனால் ரஷ்யாவோ அமெரிக்காவுக்கு மருத்துவ உபகரணங்களை கொடுத்து உதவியது.

கவலை
இந்த நிலையில் ரஷ்யாவை காட்டிலும் பிரேசிலில் பாதிப்பு குறைவாகவே உள்ளது. ரஷ்யாவின் வேகத்தை பார்த்தால் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்திற்கு விரைவில் வந்துவிடும் என தெரிகிறது. இது அந்நாட்டு மக்களை கவலையடையச் செய்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications