முக்கிய துறைமுக நகரம்.. மரியூபோலை கைப்பற்றிய ரஷ்யா.. உக்ரைனுக்கு தொடர்ந்து விழும் அடி

Subscribe to Oneindia Tamil

கீவ்: உக்ரைனில் இன்று காலை நடந்த 10வது நாள் போரில் மரியூபோல் எனும் முக்கிய துறைமுக நகரை ரஷ்ய படை கைப்பற்றியுள்ளது.

Recommended Video

    Ukraine-னின் Kherson துறைமுக நகரத்தை பிடித்த Russia | Black Sea | Odessa | Oneindia Tamil

    உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இன்று காலை 10வது நாளாக போர் தொடர்ந்தது. தலைநகர் கீவ் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களை இன்னும் ரஷ்ய வீரர்கள் கைப்பற்றவில்லை. கீவ் நகரை கைப்பற்ற தொடர்ந்து ரஷ்ய வீரர்கள் போராடி வருகின்றனர்.

    உக்ரைன் படைகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றன. இருதரப்பு மோதலில் ராணுவ வீரர்கள், அப்பாவி மக்கள் பலியாகி உள்ளனர். இதனால் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் போரை தொடர்ந்தார்.

     அணு உலைகள்...

    அணு உலைகள்...

    இதனால் சில நாட்களுக்கு முன்பு செர்னோபில் அணு உலையை ரஷ்யா கைப்பற்றியது. இதன் தொடர்ச்சியாக உக்ரைனின் தென்கிழக்கில் உள்ள இனிரோடர் நகரில் அமைந்திருக்கும் ஜபோரிசியா எனும் அணு உலையை ரஷ்ய படை சண்டையிட்டு கைப்பற்றியது. இது ஐரோப்பாவின் மிகப்பெரியது மட்டுமின்றி உலகில் 9வது மிகப்பெரிய அணு உலை என்பது குறிப்பிடத்தக்கது.

     ரஷ்யாவிடம் துறைமுக நகரம்

    ரஷ்யாவிடம் துறைமுக நகரம்

    இன்று தற்காலிகமாக போர் நிறுத்துவதற்கு முன்பு உக்ரைனில் மரியூபோல் துறைமுகத்தை ரஷ்யா படை கைப்பற்றியுள்ளது. இதை அதன் மேயர் வாடிம் பாய்சென்கோ உறுதி செய்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛ரஷ்ய படையினர் மின்சாரம், உணவு, தண்ணீர் சப்ளையை துண்டித்துள்ளனர். இதன்மூலம் இவர்களை 2ம் உலகப்போரின் நாசி படையுடன் ஒப்பிடலாம். மனிதாபிமான பிரச்சனைகளுக்கு தீர்வு தேடி வருகிறேன். மரியூபோல் நகரை ரஷ்யாவிடம் இருந்து கைப்பற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறேன்.''

     ஏன் முக்கிய நகரம்

    ஏன் முக்கிய நகரம்

    அசோவ் கடல் அருகே உள்ள இந்த நகரில் 4 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் உள்ளனர் . இங்கிருந்து தான் உக்ரைனின் கடற்வழி வாணிபங்கள் நடக்கிறது. இந்த நகரை கைப்பற்றியது மூலம் உக்ரைனின் கடல்வழி பயணம், வாணிபம் முடங்க உள்ளது. இது ரஷ்ய படைகளுக்கு தெம்பூட்டியுள்ளது. முன்னதாக உக்ரைனின் தெற்கு கருங்கடல் கடற்கரையில் உள்ள பெர்டியன்ஸ்க் மற்றும் கெர்சன் ஆகிய இரண்டு முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றி இருந்தது.

     தற்காலிக போர் நிறுத்தம்

    தற்காலிக போர் நிறுத்தம்

    இந்நிலையில் உக்ரைனுடனான அமைதி பேச்சுவார்த்தையில் ஒப்புகொண்டபடி பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேறும் வகையில் இன்று போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்படி வோல்னோவாகா, மரியூபோல் நகரங்களில் போர் நிறுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் சுமி, கீவ், செர்னிஹிவ் நகரங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+