Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகை உலுக்கிய நிகழ்வு.. வரலாற்றில் இதுவரை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களின் லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் இன்று காலை 8.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், இதுவரை பதிவான உலகின் முதல் 10 பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ரஷ்யா வரலாற்றில் 70 ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்த நிலநடுக்கம் அமைந்துள்ளது. மேலும் இதுவரை பதிவான உலகின் முதல் பத்து பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கடந்த காலத்தில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

ரஷ்யாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரஷ்யாவின் கம்சட்காவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 8.8 ஆக பதிவானது. ரஷ்யா வரலாற்றில் 70 ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்த நிலநடுக்கம் அமைந்துள்ளது. அதிகபட்ச நிலநடுக்கமாக இது பதிவு செய்யப்பட்டது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷ்யாவை சுனாமி தாக்கியது. ரஷ்யாவின் குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் பெரிய வடக்கு தீவான ஹெக்கைடோவின் கடலோர பகுதிகளை சுனாமி பேரலைகள் தாக்கின.

russia-tsunami-most-powerful-earthquakes-in-history-a-look-at-the-quakes-that-shook-the-world

உலகின் பெரிய நிலநடுக்கங்கள்

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதை பலரும் வீடியோவில் பதிவு செய்துள்ளனர். அச்சத்தில் மக்கள் அலறியடித்து வெளியேறும் காட்சிகளும் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது. நிலநடுக்கத்தால் கடும் சேதம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இருப்பினும், உயிரிழப்புகள் அல்லது காயங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலநடுக்கம் ரஷ்யாவின் தூர கிழக்கு கம்சட்கா தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் பெரிய வடக்கு தீவான ஹொக்கைடோவின் கடலோரப் பகுதிகளில் சுனாமி எற்பட்டுள்ளது. முன்னதாக ஜூலை மாதத்தில், கம்சட்கா அருகே கடலில் 7.4 ரிக்டர் அளவிலான பெரிய நிலநடுக்கம் உட்பட ஐந்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

1,655 பேர் உயிரிழப்பு

இன்று ஏற்பட்டு இருக்க கூடிய நிலநடுக்கம், இதுவரை பதிவான உலகின் முதல் பத்து பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கடந்த காலத்தில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

* 1960-ஆம் ஆண்டு சிலியில் ஏற்பட்ட 9.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வால்டிவியா நிலநடுக்கம் அல்லது பெரிய சிலி நிலநடுக்கம் என அழைக்கப்பட்டது. இதில் 1,655 பேர் உயிரிழந்தனர், 2 மில்லியன் மக்கள் வீடுகளை இழந்தனர்.

அமெரிக்காவின் அலாஸ்கா

* 1964 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் அலாஸ்காவில் 9.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பெரிய அலாஸ்கா நிலநடுக்கம், இளவரசர் வில்லியம் சவுண்ட் நிலநடுக்கம் அல்லது நல்ல வெள்ளி நிலநடுக்கம் என்று குறிப்பிடப்படுகிறது. இதில் 130 பேர் உயிரிழந்தனர் மற்றும் 2.3 பில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டது.

* 2004 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின் சுமத்ராவில் 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், தெற்காசியாவில் பெரிய அளவில் சுனாமி பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 2,80,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் மற்றும் தெற்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் 1.1 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர்.

ஜப்பானின் டோஹோகு

* 2011 ஆம் ஆண்டில் ஜப்பானின் டோஹோகுவில் 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 15,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கம் பெரிய டோஹோகு நிலநடுக்கம் என்று அழைக்கப்பட்டது மற்றும் 1,30,000 மக்கள் இடம்பெயர்ந்தனர்.

* 1952 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் கம்சட்கா கிராயில் 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது உலகின் முதல் 9 ரிக்டர் என்ற அளவிலான நிலநடுக்கமாக பதிவானது. இது ஹவாயைத் தாக்கிய ஒரு பெரிய சுனாமியை ஏற்படுத்தியது. இதனால் 1 மில்லியன் டாலருக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டது.

* 2010 ஆம் ஆண்டில் சிலியில் உள்ள பயோபயோவில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதில் 523 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3,70,000 க்கும் அதிகமானோர் வீடுகள் சேதமடைந்தன.

ஈக்வடார் - கொலம்பியா

* 1906 ஆம் ஆண்டில் ஈக்வடாரில் உள்ள எஸ்மெரால்டாஸில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஈக்வடார் - கொலம்பியா நிலநடுக்கம் என்று குறிப்பிடப்பட்டது. இது ஒரு வலுவான ஆழிப்பேரலையை உருவாக்கியது. இதில் 1,500 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சான் பிரான்சிஸ்கோ வரை இதன் தாக்கம் உணரப்பட்டது.

* 1965 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் அலாஸ்காவில் 8.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 35 அடி வரை சுனாமி அலைகள் எழுந்தன.

* 1950 ஆம் ஆண்டில் இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் 8.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 780 பேர் உயிரிழந்தனர். அசாம்-திபெத் நிலநடுக்கம் என்று குறிப்பிடப்படும் இந்த நிலநடுக்கம் இப்பகுதியில் மணல் வெடிப்புகள், தரை விரிசல்கள் மற்றும் பெரிய நிலச்சரிவுகளை ஏற்படுத்தியது.

* 2012 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின் சுமத்ராவில் 8.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

மக்கள் வெளியேற்றம்

* இன்று ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள 1,80,000 மக்கள் தொகை கொண்ட பெட்ரோபாவ்லோவ்ஸ்க் - கம்சட்ஸ்கி நகரத்திலிருந்து சுமார் 119 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது.

பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கியில் நிலநடுக்கம் உணரப்பட்டவுடன் மக்கள் வீடுகளை விட்டு தெருக்களில் தஞ்சமடைந்தனர். வீடுகளுக்குள் இருந்த அலமாரிகள் சரிந்தன, கண்ணாடிகள் உடைந்தன, தெருவில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் குலுங்கின. மின்சாரம் தடைபட்டது மற்றும் மொபைல் போன் சேவைகள் செயலிழந்ததாக டாஸ் தெரிவித்துள்ளது. மேலும், சாகலின் தீவில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+