துருக்கிக்கான ரஷ்ய தூதர் மர்ம நபரால் சுட்டுக்கொலை.. மேலும் 3 பேர் படுகாயம்
துருக்கிக்கான ரஷ்ய தூதர் அண்ட்ரிவ் கொலோவ் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
அங்காரா: துருக்கிக்கான ரஷ்ய தூதர் அண்ட்ரிவ் கொலோவ் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
துருக்கி தலைநகர் அங்காராவில் நடந்த புகைப்பட கண்காட்சியில் துருக்கிக்கான ரஷ்ய தூதர் அண்டிவ் கொலோவ் கலந்து கொண்டார். அதில் அவர் பேசத் துவங்கிய சில நிமிடங்களிலேயே, மர்மநபர் ஒருவர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டார்.
இதில் படுகாயமடைந்த அண்ட்ரிவ் கொலோவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மேலும் இதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் மர்மநபர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போலீஸ் அடையாள அட்டையுடன் கூட்டத்தில் புகுந்து, மர்மநபர் துப்பாக்கி சூடு நடத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Pictures of the ambassador right before he was shot. pic.twitter.com/B5k8foVCjp
— Gilgo (@agirecudi) December 19, 2016