சிரியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்
டமாஸ்கஸ்: சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ரஷ்யத் தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் 40 ஆண்டுகாலத்துக்கும் மேலாக அதிபர் ஆசாத்தின் குடும்பத்தினரே ஆட்சியில் இருந்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்தி உள்நாட்டுப் போரை நடத்தி வருகின்றனர். கிளர்ச்சி படையினருக்கு நேட்டோ நாடுகள் ஆதரவளித்து வருகின்றன.

சிரியாவில் அதிபர் அசாத் அரசாங்கத்துக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஐ.எஸ். குழு மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்திவருகிறது. இதுவரை வான் வழியாக ஐஎஸ் தீவிரவாதிகளின் இருப்பிடங்களை குண்டு வீசி தாக்கி வந்த ரஷ்யா, தற்போது போர்க்கப்பல்களையும் களத்தில் இறக்கியுள்ளது.
இந்நிலையில், சிரிய அரசு எதிர்ப்பு போராளிகளுக்கு எதிராகவும், தீவிரவாதிகளுக்கு எதிராகவும் ரஷ்யா நடத்தி வரும் அதிரடித் தாக்குதலுக்கு ஆதரவாகவும் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. இது சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் என்ற இடத்தில் உள்ள ரஷ்யத் தூதரகத்தின் முன்பு நடைபெற்றது. இதில் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.
அப்போது அங்கு அடுத்தடுத்து இரண்டு ராக்கெட் வந்து விழுந்தது. திடீரென ராக்கெட் வீசப்பட்டதால் மக்களிடையே பீதி எழுந்தது. பலர் கலைந்து ஓடினர். இருப்பினும் யாரேனும் இதில் காயமடைந்தனரா அல்லது இறந்தனரா என்பது குறித்துத் தகவல் இல்லை.
முன்னதாக அரசு எதிர்ப்புப் படையினர் ரஷ்யத் தூதரகத்தைத் தாக்க குறி வைத்துக் காத்திருந்தனர். கடந்த காலத்திலும் கூட தாக்குதல்கள் நடந்துள்ளது. ஆனால் தற்போது நடந்த தாக்குதல் தூதரகத்தைக் குறி வைத்து வீசப்பட்டதா அல்லது மக்களைக் குறி வைத்து நடந்ததா என்பது தெரியவில்லை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications