சிரியா தீவிரவாதிகள் மீது வான்வழியோடு கடற்படைத் தாக்குதலையும் தொடங்கிய ரஷ்யா
மாஸ்கோ: சிரியா தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதலோடு கடற்படையையும் சேர்த்துத் தாக்கத் தொடங்கியுள்ளது ரஷ்யா.
சிரியாவில் அதிபர் அசாத் அரசாங்கத்துக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஐ.எஸ். குழு மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்திவருகிறது. அதிபர் அசாத் எதிர்த்து போராடும் கிளர்ச்சி படையினருக்கு நேட்டோ நாடுகள் ஆதரவளித்து வருகின்றன.

இதுவரை வான் வழியாக ஐஎஸ் தீவிரவாதிகளின் இருப்பிடங்களை குண்டு வீசி தாக்கி வந்த ரஷ்யா, தற்போது போர்க்கப்பல்களையும் களத்தில் இறக்கியுள்ளது.
கடல்வழித் தாக்குதல்...
கஸ்பியன் கடல் பகுதியில் இதற்கென நான்கு போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டு, 11 இலக்குகளை நோக்கி 26 ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியிருப்பதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு காயமில்லை...
இந்த இலக்குகள் அனைத்தும் சுமார் 1500 கிமீ தொலைவில் இருந்தவை என்றும், தாக்குதலில் திட்டமிட்டபடி இலக்குகள் அனைத்தும் தகர்க்கப்பட்டதாகவும், இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் யாருக்கும் காயமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
வான் வழித்தாக்குதல்...
ஏற்கனவே, சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கெதிரான வான் தாக்குதலில் 23 ரஷ்ய போர் விமானங்கள் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அவை தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
ஆயுதத்தொழிற்சாலைகள் அழிப்பு...
இதுவரை 112 இலக்குகளை ரஷ்ய போர்விமானங்கள் குண்டு வீசித் தாக்கியுள்ளதாகவும், தீவிரவாதிகளின் 19 தலைமையிடங்களை அழித்துள்ளதாகவும் சோஷி தெரிவித்துள்ளார். அதேபோல 12 ஆயுதக் கிட்டங்கிகளையும் ரஷ்ய போர்விமானங்கள் தாக்கி அழித்துள்ளன. இவை தவிர 71 கவச வாகனங்களையும் ரஷ்யப் படைகள் அழித்துள்ளன. பல ஆயுதத் தொழிற்சாலைகளையும் ரஷ்யப் படைகள் அழைத்துள்ளனவாம்.
மும்முனைத் தாக்குதல்...
இந்த நிலையில் சிரிய ராணுவத்துடன் இணைந்து ரஷ்ய ராணுவமும் தாக்குதல் நடத்த தற்போது ஆயத்தமாகி வருகிறதாம் ரஷ்யா. இது நடந்தால் மூன்று முனைத் தாக்குதலில் சிக்கி தீவிரவாதிகள் நிலைகுலைவார்கள் என்று கருதப்படுகிறது.
அதிரடித் தாக்குதல்...
ரஷ்யாவின் இந்த அதிரடித் தாக்குதலால் மேற்கத்திய நாடுகள் அதிர்ச்சியில் மூழ்கிப் போயுள்ளன. சும்மா ஒப்புக்கு தாக்குதல் நடத்தி வரும் மேற்கத்திய நாடுகளைப் போல இல்லாமல் உள்ளே இறங்கி அடிக்கும் ரஷ்யாவின் தாக்குதலால் அவை சற்று ஆடிப் போய்த்தான் உள்ளதாக பார்வையாளர்கள் கருதகிறார்கள்.
-
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications