108 பெண்களை பலாத்காரம் செய்த 67 வயது நபர் கைது- பிறந்த நாளில் இதை கட்டாயம் செய்வானாம்!
மாஸ்கோ: ரஷ்யாவில் 108 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ரஷ்யாவில் கிட்டதட்ட 108 பெண்களை கடுமையாக பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கியவர் வேல்ரி மெக்ரன்கோவ் என்ற 67 வயதான மனிதன்.
மனித உருவில் உள்ள இந்த கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர்.சுமார் 27 வருடங்களாக இவர் காவல்துறையிடம் மாட்டாமல் இக்கொடூர செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
முகமூடி கொடூரன்:
பெண்களுக்கு முகத்தைக் காட்டாமல், முகமூடி அணிந்து கொண்டு பாலியல் வன்முறையில் இவர் ஈடுபட்டுள்ளார்.மேலும், பலாத்காரத்திற்குப் பின் அப்பெண்களின் நகைகளையும் இவர் திருடி உள்ளார்.
பொறியில் மாட்டிய எலி:
அப்படி பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய இவர், ஒரு பெண்ணின் மூலமே போலீசில் மாட்டிக் கொண்டுள்ளார்.29 வயதான ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற போது, அப்பெண் இவருடைய முகமூடியை கழற்றியதும் இல்லாமல் காவலர்களிடமும் அடையாளங்களைக் கூறி பிடித்துக் கொடுத்துள்ளார்.
வயசாகி போய்டுச்சு:
உடனே விரைந்து செயல்பட்ட போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே சுற்றிக்கொண்டிருந்த இவரை பிடித்துள்ளனர். நீண்ட காலமாக போலீசில் சிக்காமல் தப்பித்துவந்த இவர், வயதான காரணத்தால் தான் அப்பெண்ணிடம் சிக்கி அடி வாங்க நேர்ந்ததென்றும், போலீசிலும் சிக்க நேர்ந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
பிறந்தநாள் அன்று பலாத்காரம்:
தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது இவர் தான் என அப்பெண் போலீசிடம் அடையாளம் காட்டி உறுதிப்படுத்தினார். போலீசார் நடத்திய விசாரணையில் தன்னுடைய பிறந்த நாளன்று எப்போதும் இவர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இதெல்லாம் ஒரு அர்ப்பணிப்பு:
மேலும், பிறந்தநாள் பரிசாக தன்னையே பெண்களுக்கு அர்ப்பணித்தாகவும் கூறி தன்னுடைய செயலை நியாயப்படுத்த முயற்சித்துள்ளார்.தற்போது, இவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications