பிரேசிலை அதிரவைத்த கே, லெஸ்பியன்கள் பேரணி! திருவிழாவாக மாறிய விந்தை

Subscribe to Oneindia Tamil

சாபவுலோ: லெஸ்பியன்கள், ஓரின சேர்க்கை ஆண்கள் கலந்து கொண்ட மிகப்பெரிய பேரணி பிரேசிலில் நடந்துள்ளது. கிறிஸ்தவ வலதுசாரிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த பேரணி அரசு ஆதரவுடன் வெற்றிகரமாக நடந்துள்ளது.

பிரேசில் நாட்டில், ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது கிறிஸ்தவ வலதுசாரி ஆதரவாளர்கள் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. இதைக் கண்டித்தும், தங்கள் மனநிலையை மக்களுக்கு உணர்த்தவும், தலைநகர் சாபவுலோவில் ஆயிரக்கணக்கான ஓரினச் சேர்க்கையாளர்கள் பங்கேற்ற பேரணி நடந்தது.

Sao Paulo gay pride

லெஸ்பியன், கே, பைசெக்சுவல் மற்றும் திருநங்கைகள் இதில் கலந்து கொண்டனர். இவ்வாண்டுக்கான கோஷமாக "நான் இப்படித்தான் பிறந்தேன், இப்படித்தான் வளர்ந்தேன். எனவே இப்படியே இருக்க ஆசைப்படுகிறேன். எங்களை மதியுங்கள்" என்பதாகும்.

Sao Paulo gay pride

முதல் முறையாக ஓரினச் சேர்க்கையாளர்கள் பேரணி 1997ல் நடைபெற்றது. தற்போது இந்த பேரணியில்பங்கேற்போர் எண்ணிக்கை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதை 5 நாள் திருவிழாவாகவே மாற்றி, உலக நாடுகளில் இருந்து இதேபோன்ற மனநிலை உள்ளவர்களை ஈர்க்கும் முயற்சி நடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+