"தலையை" வெட்ட ஆட்கள் தேவை.. சவுதி அரேபியா அரசு பகீர் விளம்பரம்!
ரியாத்: சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிப்பது அதிகரித்ததை தொடர்ந்து, தலையை வெட்டும் ஆட்கள் தேவை என்று அந்த நாட்டு அரசு விளம்பரம் செய்துள்ளது.
உலகில் அதிகமாக மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாடுகள் பட்டியலில் மன்னர் ஆட்சி நடைபெற்று வரும் சவுதி அரேபியா 5வது இடம் பிடித்துள்ளது. அங்கு தண்டனைக்குள்ளானவர்கள் தலையை வாளால் வெட்டி கொலை செய்ய வேண்டும். இத்தகையை பணியினை செய்ய, பலரும் தயங்குகின்றனர்.
எனவே, ‘மரண தண்டனையை நிறைவேற்ற' ஆட்கள் தேவை என்று சவுதி அரசு விளம்பரப்படுத்தி உள்ளது. மரண தண்டனையை நிறைவேற்ற 8 பேர்கள் வேண்டும் என்று சவுதி அரேபியா விளம்பரம் செய்து உள்ளது.

அரசு வெப்சைட்டில் இதற்கான விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு முன் அனுபவம் தேவையில்லை என்றும், சம்பளம் குறைவாகவே தரப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு சவுதி அரேபியாவில் 85 பேர்கள் தலையை வெட்டி கொலை செய்யப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு மொத்தமே 88 பேருக்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்தாண்டில் இது மேலும் அதிகரித்துவிட்டது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டு உள்ளது.
இந்த நிலை கவலையளிப்பதாகவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
கடந்த வருடம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதில் பெரும்பாலானோர் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் பாகிஸ்தான், ஏமன், சிரியா, ஜோர்டான், இந்தியா, இந்தோனேஷியா, பர்மா, ஷாட், பிலிப்பைன்ஸ் மற்றும் சுடான் நாட்டை சேர்ந்தவர்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications