கிரெடிட் கார்டை பயன் படுத்தியதற்காக கண்டித்த தாய்... மனமுடைந்த 13 வயது சிறுவன் தற்கொலை
நியூயார்க்: அமெரிக்காவில் கிரிடிட் கார்டு மூலம் 420 டாலர் மதிப்பிலான விளையாட்டுச் சாதனங்களை வாங்கியதற்காக அம்மா கண்டித்ததால், 13 வயது சிறுவன் ஒருவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
அமெரிக்காவில் வசித்து வந்த 13 வயது பள்ளி மாணவன் ஹென்றி. இவன் கடந்தாண்டு நவம்பர் மாதம் தனது தாயாரின் கிரெட்டிட் கார்டை பயன்படுத்தி, ஆன்லைனில் சில விளையாட்டு சாதனங்களை வாங்கியுள்ளான். இதற்காக அவன் செலவழித்த தொகை 420 டாலர் ஆகும். இந்திய மதிப்பில் சுமார் இருபத்தாராயிரம் ரூபாய்.
மகனின் இந்தச் செயல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் அவனது தாயாருக்குத் தெரிய வந்துள்ளது. இதனால், அவர் ஹென்றியைக் கண்டித்துள்ளார். இதனால் மிகவும் வருத்தத்தில் இருந்துள்ளான் ஹென்றி. இதற்கிடையே நேற்று முந்தினம் மாலை தன் நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்த போதும் ஹென்றியைக் கணித்துள்ளார் அவனது தாயார்.
இதனால் மனமுடைந்த ஹென்ரி தனது அரையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளான். தற்கொலைக்கு 15 நிமிடங்களுக்கு முன் பேஸ் புக்கில் நான் சாகப்போகிறேன் என்று செய்தி வெளியிட்டுள்ளான் ஹென்றி.
சிறுவனின் இறப்பு குறித்து அவனது தாயார் தெரிவித்ததாவது :-
கடந்த வருடம் நவம்பர் 25-ந்தேதி கிரடிட் கார்ட் வாங்கினேன் எனக்கு தெரியாமலேயே எனது கிரடிட் கார்டு அட்டையை எனது மகன் எடுத்துள்ளான். கிரடிட் கார்ட்டை பயன்படுத்தி 420 டாலர்கள் விளையாட்டிற்காக ஆன் லைனில் பர்ச்சஸ் செய்துள்ளான். இந்த செய்தி சமீபத்தில் தான் எனக்கு தெரியவந்தது. இதனை நான் வன்மையாக கண்டித்தேன், அவன் இவ்வளவு பணத்தை செலவு செய்தது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் எனது மகன் நேற்று மாலை 4.20 மணி அளவில் நண்பர்களுடன் பேசிகொண்டிருந்தான், பின்னர் 5 மணிக்கு அழைத்தபோது அவன் வர மறுத்துவிட்டான் அவனது அக்கா மாடிக்கு சென்று அழைத்தபோது அவன் வர மறுத்துவிட்டான் பின்னர் 6.30 மணி அளவில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது மிகவும் அதிர்சியை அளிக்கிறது' என கண்ணீரோடு தெரிவித்துள்ளார் அவனது தாயார்.
ஹென்றி தற்கொலை செய்துகொள்வதை அவனது அக்கா நேரில் பார்த்துள்ளார். அவர் அளித்த தகவலின் பேரிலேயே விரைந்து வந்த அவனது பெற்றோர் சிறுவனை அருகில் உள்ள மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால், மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.